இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

பிராமணர் கதை-Tale of iyer-real life story

படம்
இந்திய சுதந்திர பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிய 1947 காலகட்டம் அது, ராகவாச்சாரி என்ற குமாஸ்தாவின் மகன் சாரதி, பெண்களின் உரிமைகளுக்காக இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வீதி வீதியாக சென்று போராடினார், சாரதி மேற்கத்திய கல்விசாலையில் பயின்றவர், வெள்ளந்தியான மனிதர், ஆண்,பெண் பேதமின்றி பழகுவார், ராகவாச்சாரி ஊரிலே செல்வாக்கு மிக்கவராய் இருந்த போதும், சாரதி எளிய மனிதராகவே திகழ்ந்தார், சாரதி சிறு சிறு போராட்டங்களில் தம்மை முன்னிறுத்தி கொண்டு நிற்பவர், ஒரு நாள் ரயில்வே பணிக்காக வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கும் புறநகர் பகுதியில் இலவச உணவு வழங்க சென்றார், அந்த இடம் அதிக துர்நாற்றம் கொண்டதாக இருந்ததால், சர்காரிடம் முறையிடலாம் என்று அங்குள்ளவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார், அப்போது, அங்கு குஞ்சம்மாள் என்ற கணவனால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தைக்கு உடல் சரியில்லை என்று கூறி சாரதியிடம் மூன்று ரூபாய் பெற்று சென்றாள். மறுநாள் அலுவலக பணிகள் முடிந்து இரவு வீடு திரும்பி கொண்டிருந்த சாரதியின் பின்னால் யாரோ ஓடி வருவது போல தோன்றியது, ஆனால் அவர் திரும்பி பார்க்கும்போதெல்லாம் அந்த நபர் மறைந்துகொள்வது போ

டெலிபதி பயிற்சி | டெலிபதி செய்வது எப்படி | Telepathy Communication

படம்
டெலிபதி ஒரு கண்ணோட்டம்: நமது பண்டைய மூதாதையர்களிடமிருந்து பயணித்து வந்த, நாம் அனைவரும் மற்றவர்களின் உணர்வுடன் இணைக்கும் உள்ளார்ந்த திறனை இயற்கையாகவே கொண்டுள்ளோம். எனது தனிப்பட்ட நம்பிக்கை என்னவென்றால், இந்தக் கட்டுரையின் மூலம், உங்கள் சொந்த டெலிபதிக் சக்திகளுடன் நீங்கள் இணைவதற்கும் வலுப்படுத்துவதற்கும் நான் உங்களுக்கு உதவ முடியும். நான் இங்கே எழுத்துபூர்வமாக காட்டிய நடைமுறைகள் நிச்சயமாக நமது சொந்த திறமைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். தகவல்தொடர்பு பற்றி நாம் சிந்திக்கும்போது, ​​பொதுவாக பேசுவதையும்,எழுதுவதையும் மட்டுமே குறிப்பிடுகிறோம். ஆனால் ஆழ்மனம் மூலம் இணைவது குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. டெலிபதி பற்றி அதிகம் அறிவதற்கு முன்பு, இந்த வார்த்தையைக் கேட்டவுடன் மாய சக்திகள் கொண்ட சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்கள் மனதில் தோன்றின. ஆனால் உண்மை என்னவென்றால், மற்றவர்களுடன் மனதளவில் தொடர்பு கொள்ள உங்களுக்கு ஒரு  மாய சக்தி   தேவையில்லை. டெலிபதி என்பது நாம்  அனைவரின் உள்ளே ஒளிந்திருக்கும்  ஒரு பரிசு என்று கூறலாம். டெலிபதி என்றால் என்ன? டெலிபதி என்பது மற்றொரு நபரிடமிருந்து எண்ண

பெண் பாவம் பொல்லாதது-karma Story of innocent girl

படம்
முன்பு ஒரு காலத்தில் சென்னை சைதாப்பேட்டையில்,கங்கா என்ற திருமணம் ஆகாத பெண், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தாள், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகுட்டிகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பது கங்காவின் கனவாக இருந்தது, எனினும் ஏழ்மை சூழல் காரணமாக அவளது கனவு தள்ளி சென்று கொண்டிருந்தது, ஒரு நாள் ராஜேஸ்வரி என்ற வசதி படைத்த பெண்ணின் வீட்டு வேலைகள் மற்றும் துணி துவைக்க கங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது, சென்னை, அண்ணா நகர் மேற்கில் உள்ள ராஜேஸ்வரியின் இல்லத்தில் வீட்டு வேலை செய்ய வந்த கங்காவிற்கு, அவள் தங்குவதற்கான ஒரு அறை காண்பிக்கப்பட்டது, மகிழ்ச்சியுடன் தனது வீட்டு வேலைகளை தொடங்கிய கங்கா, ராஜேஸ்வரியின் சமையல் அலமாரியை மெதுவாக நோட்டமிட்டு கொண்டிருந்தாள், அங்கு மேஜை மீது, பொறித்த கோழி, பழங்கள், பழரசங்கள், இனிப்பு, இறால் மற்றும் நண்டு வறுவல்கள் முதலியவற்றை கண்டதும் கங்காவிற்கு நாவில் எச்சில் ஊறியது, ஏழை பெண்ணான கங்காவிற்கு இத்தனை வகை உணவுகளையும் சுவைக்க வேண்டுமென கொள்ளை ஆசை, இருந்தும் தனது ஆசையை அடக்கி கொண்டாள். ராஜேஸ்வரியின் மகன் சோமு வெளி நாட்டிலிருந்து தனது இல்லத்திற்கு வந்தான், அவன் வந்தத

காதல் வசிய மந்திரம்-பிரிந்த காதல் சேர-Powerful Love Mantra in Tamil

படம்
காதல் உணர்வு என்பது நமது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.ஒரு தலை காதல் மற்றும் உங்கள் பெற்றோரின் எதிர்ப்பில் சிக்கும் காதல், யாரோ சிலரின் குறுக்கீடுகளில் பல தடைகள் காதலில் இருக்கலாம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான காதல் வசீகர மந்திரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து வெற்றிபெற விடாமுயற்சியுடன் பயன்படுத்த வேண்டும்.   மிக சக்தி வாய்ந்த காதல் மந்திரம்: " ஓம் சாமுண்டே ஜெய் ஜெய் ஸ்தம்பியா ஸ்தம்ப்ய பன்ஜ்ய பன்ஜ்ய மோஹே மோஹே சர்வஸ்தே நம ஸ்வாஹா ஓம் சாமுண்டே ஜெய் ஜெய் ஸ்தம்பாய ஸ்தம்பாய பஞ்சாய" இந்த மந்திரம் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும்,தடைபட்ட காதலில் வெற்றி பெறவும் உதவும், மேலும் ஒரு தலை காதலால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் பயனளிக்ககூடியது.  உங்கள் காதலன் அல்லது காதலியை உங்கள் வசப்படுத்த  இந்த வசீகர மந்திரத்தை 7 நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில்  108 முறை சொல்லுங்கள். இந்த வசீக மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது, சில மணிநேரங்களுக்குள் நீங்கள் மந்திரத்தின் பலனை பார்க்கத் தொடங்குவீர்கள். மந்திரத்திற்காக உபவாசமோ அல்லது வேறு சில யாகங்களோ செய்ய தேவையில்லை காலையில் குளிர்ந்த நீரில் நீரா

கெட்ட சகுனங்கள்-அலட்சியம் செய்தால் உயிருக்கே ஆபத்து- Bad Omen Explained

படம்
சென்னையை சேர்ந்த மாணவன் வெற்றிவேலன் தனது மருத்துவ படிப்பிற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தான். விடுமுறையை கழிப்பதற்காக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்தான். அதன்படி ஆயுதபூஜைக்கு முந்தைய நாள் சென்னையில் உள்ள தனது வீட்டை அடைந்தான். வெற்றி வேலனின் குடும்பம் கூட்டு குடும்பம் என்பதால் அம்மா, அப்பா தாத்தா,பாட்டி,அண்ணண் அன்னி குழந்தைங்களுடன் குதூகலமாக நாட்களை செலவிட்டான். விடுமுறை என்பதால் வெற்றிவேலனின் குடும்பத்தினர் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர், எனவே அவர்கள் கேரளம் செல்ல திட்டமிட்டு , தங்களது காரில் பயணம் மேற்கொண்டனர், சிலமணி நேர பயணத்துக்கு பின் பயண களைப்பு ஏற்பட்டதால் அனைவரும் காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு பெட்டிக்கடை ஒன்றில் பழரசம் அருந்தினர் பின்னர் வெற்றிவேலனின் அப்பா ரத்தினம் காரை இயக்கி தனது பயணத்தை தொடர அனைவரும் ஆடல் பாடல் என உற்சாகமாக இருந்தனர் இரவு 11:45 மணி அளவில் கேரளாவை அடைந்தனர். திருவனந்தபுரத்தில் ஒரு வசதிமிக்க ஹோட்டலில் குடும்பமாக அனைவரும் தங்கினர். கேரளாவில் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு மகிழ்ச்சியுட

ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள துடிக்கும் பேய்கள்-களம் இறங்கிய காமுகனின் ஆவி | Real ghost story in Tamil

படம்
சினிமா மற்றும் யூடூப் போன்ற பல காணொளிகளில் காட்டப்படுவது போன்று பேய்கள் தாமாகவே அங்கும் இங்கும் ஓடாது, காற்றில் மிதந்து செல்லாது, வீட்டில் தானாக கதவு திறக்காது, தண்ணீர் குழாயை திறந்தால் ரத்தம் வராது, இவ்வாறு காட்டப்படுவதெல்லாம் முழுதும் பொய் புரட்டு. யார்  இந்த பேய்கள்: பூமியில் கொடூரமான தீய சம்பவங்கள் செய்பவரும், பிறர் குடி கெடுத்து வாழ்பவரும்,கொலைகள் , கற்பழிப்புகள் போன்ற தீமைகளை செய்யும் கெட்ட மனிதர்கள் இறந்த பின் ஆத்ம லோகத்திற்கு செல்லமுடியாமல் பூமியிலே பேய்களாக தங்கி விடுகின்றனர்,  இந்த கெட்ட ஆத்மாக்கள் நம் உடலை ஆக்கிரமித்தும், பல்வேறு வகைகளில் நமக்கு தீமைகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.  தீய ஆன்மா நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்: தற்கொலை எண்ணங்கள்,  ஜுரம்,குடும்பத்தில் பிரச்சனைகள்,சபலம்,அடிக்கடி சுய இன்பம் காணுதல் , கோர விபத்து, உடலில் அடிக்கடி காயங்கள், உடல் வலி, ஒற்றை தலைவலி, கர்பம் கலைதல், பாதத்தில் புண், தொடர் தோல்விகள், முதலியன. பேய்களுக்கு உருவம் உண்டா : தீய ஆன்மாக்கள் இறந்த பின்பு சிதைந்த மற்றும் அதிக கனத்துடன் கூடிய உடலில்  இருக்கின்றன என்பதை ஆவியுலக ஆராய்ச்சியா

நெகடிவ் ஆற்றல் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்-ஒரு உண்மை சம்பவம்-Impact of negative vibrations

படம்
மாதவராஜ்- கோகிலவாணியின் இளைய மகன் திருநாவுக்கரசு நன்கு படிக்கும் மாணவன், பள்ளி மற்றும் கல்லூரியில் எப்போதும் முதன்மையான மாணவனாக திகழ்பவன், மதுரையில் ஒரு அழகிய கிராமத்தில் இந்த குடும்பம்  வசித்து வந்தது. எனினும் மேற்படிப்பிற்காக  சென்னைப்பட்டிணம் செல்லும் சூழல் திருநாவுக்கரசிற்கு ஏற்பட்டது, ஒரு வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தான் திருநாவுக்கரசு, தான் பயிலும் அரசு தேர்வாணை பயிலகத்தில் தன் புதிய நண்பன் அமுதனுடன் தங்கும் விடுதியை தேடி அலைந்து   கொண்டிருந்தான், எங்குமே  இடம் கிடைக்கவில்லை, அமுதனுக்கு தெரிந்த ஆட்டோ  ஓட்டுநர் குப்பன் தான் வசிக்கும் தெருவில் ஒரு  ஆண்கள் விடுதி இருப்பதாக கூறி திருநாவுக்கரசையும்  அமுதனையும் அனுப்பி  வைத்தான், அந்த இடம்  பார்ப்பதற்கே படுபயங்கரமாக இருந்தது, ஆவடியில்  உள்ளே அமைந்துள்ள அந்த இடத்தில் சாராயம் காய்ச்சுபவர்களும், கொலைக்குற்றவாளிகளும்,  கஞ்சா விற்கும் பெண்களும் இருந்தனர், அந்த தங்கும்   விடுதியும் சுத்தம் இல்லாமல் இருந்தது, வேறு வழி இல்லாமல் திருநாவுக்கரசு அங்கு அமுதனுடன் தங்கும் சூழல் ஏற்பட்டது.அரசு தேர்வுக்கு தயார் ஆவதால் தப்பை தட்டி கேட்கும் தைரியம் தி

பூமியில் பிசாசின் ஆட்சி-வருகிறான் அந்தி கிறிஸ்து-Anti Christ

படம்
இயேசு கிறித்துவின் இரண்டாம் வருகையின் போது, கர்த்தருக்கு கீழ்ப்படிந்து நடந்த நீதிமான்கள் அனைவரையும், கிறிஸ்து தன்னோடு விண்ணுலகம் அழைத்து செல்வார். பின்னர் ஒரு ஏழு வருடம் பூமியை அந்தி கிறிஸ்து என்னும் பிசாசு ஆள்வான்,கிறிஸ்துவை விசுவாசிக்காத அனைவரும் அந்தி கிறிஸ்து வசம் இருப்பார்கள். உலகின் அதிபதி என அழைக்கப்படும் பிசாசு, பூமியின் கடைசி காலத்தில் ரோம் நகரில் இருந்து வருவான் என வேதங்கள் சொல்கிறது, அவனது வருகை மிக விரைவில் என்பதற்கு ஏற்ப பூமியில் அக்கிரமங்கள், அட்டூழியங்கள், கொலைகள்,கற்பழிப்புகள், ஊழல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அந்த பிசாசானவன் ஏழு ஆண்டுகள் உலகை ஆள்வான் எனவும், தன்னை கடவுள் என கூறி கொண்டு இறந்த ஒருவனை உயிர்ப்பித்து உலகை அதிர செய்வான், அவனது ஆட்சி பூமி எங்கும் கொண்டு வரப்பட்டு அனைத்தும் அவன் கட்டுப்பாட்டிற்கு செல்லும், மனிதகுலம் அவனை பணிந்துகொள்ள துவங்கும், உலகில் வாழும் அனைத்து மனிதர்கள் உடலிலும் ஒரு மின் சிப் பொருத்தப்படும் திட்டத்தை அமல்படுத்துவான், அந்த சிப் மூலம் அவன் மனிதர்களின் முழு நடவடிக்கைகளையும் கண்காணிப்பான், அவனை மீறி யாராலும் செயல்படமுடியாது, அப்பட

ஆவிகள் தங்கும் ஹோட்டல்-Brij Raj bhawan-Haunted

படம்
பிரிஜ் ராஜ் பவன் ஹெரிடேஜ் ஹோட்டல் ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள ஒரு அழகான அரண்மனை ஹோட்டலாகும். இந்த இடம் அதன் மெருகூட்டும் மஞ்சள் சுவர்கள், பூகெய்ன்வில்லியா செடிகள் மற்றும் பழைய தரத்துடன்கூடிய நயமிக்க வசீகரத்துடன் ஒரு விசித்திரமான, இடம் போல் தெரிகிறது. இந்த அரண்மனை 1830 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் கட்டப்பட்டது. 1900 ஆம் ஆண்டில், இது ஒரு மாநில விருந்தினர் மாளிகையாக மாறியது. பழைய நயத்துடன் காட்சியளிக்கும் இந்த இடம் 180-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான சொத்து சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தளபாடங்களுக்காக குறிக்கப்பட்ட விசாலமான அறைகளை விரும்பும் பல பயணிகளை ஈர்க்கும் அம்சங்களை இது கொண்டுள்ளது, மேலும் பிரமிக்க வைக்கும் வாழ்க்கை மற்றும் அழகான சித்திர அறைகள், அரச அலங்காரம், அழகான புல்வெளிகள் மற்றும் பசுமையான மாடித் தோட்டங்கள், கீச்சிடும் பறவைகள், நல்ல வானிலை, சிறந்த பாரம்பரிய மற்றும் புதிய வகை உணவு குறிப்பாக உள்ளூர் வகைகளுக்கு பெயர் பெற்றது. அதே அரண்மனையில் வசிக்கும் அரச குடும்பத்தின் பொறுப்பு மற்றும் பல. இந்த இடம் ஒரு பயமுறுத்தும் வரலாற்றைக் கொண்டுள்ள

புதிய வீட்டிற்கு பழைய ஜன்னல் மற்றும் கதவுகள் வைக்கலாமா? House Window Vastu in tamil

படம்
சில வருடங்கள் முன்பு எங்கள் நண்பர் மாறன் என்பவர் புதிதாக வீடுகட்டி குடியேறினார், சில மாதங்கள் வரை வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது, திடிரென்று ஒரு நாள் மாறனுக்கும் அவர் மனைவிக்கும் உடல் நலம் சரி இல்லாமல் போய் கொண்டிருந்தது, வாஸ்து சாஸ்திரம் அமைப்பு சரியாக இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது என்று மாறன் குழம்பினார்,பல பொய் ஜோதிடர்கள் ஏதேதோ சொல்லி பணத்தை பறித்து சென்றனர், ஆனாலும் பலன் இல்லாமல் போனது. நாட்கள் செல்ல செல்ல நிம்மதியை இழந்த மாறன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பழமையான சித்தர் ஒருவரை அணுகி, புதிய வீடு கட்டிய பின்னர் அடிக்கடி அனைவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போவதற்கான காரணத்தை கேட்டார், அதற்கு பதிலளித்த சித்தர், மகனே மாறா! உன் வீட்டில் உள்ள தலைவாசல் கதவு உட்பட அனைத்து ஜன்னல்களை உடைத்து எறிந்துவிட்டு புதிதாக ஜன்னல்கள் மற்றும் தலைவாசல் அமைக்க சொன்னார், சித்தர் சொன்னபடி மாறனும் அனைத்து ஜன்னல்கள் உட்பட தலைவாசல் கதவையும் புதிதாக மாற்றினார், வீட்டில் மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ துவங்கின,நல்ல ஆரோக்கியமும் நல்ல லாபமும் ஏற்பட ஆரம்பித்தன, மாறனுக்கு இன்ப அதிர்ச்சியும்,ஆனந்தமும் ஏற்பட

இடுமருந்து அறிகுறிகள்-இடுமருந்து பாதிப்பு-இடுமருந்து வெளியேற

படம்
தம்பன இடுமருந்து ஒருவரை முன்னேறவிடாமல் அழிக்கும் செயல் என்று வரையறுக்கபடுகிறது. குறிப்பிட்ட விஷ மூலிகைகளை கொடுப்பதன் மூலம் ஒருவரின் சிந்தனை மற்றும் அறிவுத்திறனை    குறைத்து தெளிவாக முடிவெடுக்க முடியாமல் செய்வதே  இந்த தம்பன இடுமருந்தின் செயல்பாடு என்று சொல்லப்படுகிறது. தம்பனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எப்போதும் மன உளைச்சலுடன் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பார்கள்.  புதிய முயற்சிகள்.வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள், செயல் மற்றும் உற்சாகம் போன்றவை இவர்களிடம் இருக்காது. எந்த செயலிலும் ஈடுபாடும், விருப்பமும் இருக்காது.மூளையின் ஆற்றலை மழுங்கடிக்க செய்து விடும். இடுமருந்து கொடுக்கபடும் முறை: இந்த விஷ போஜனம் உண்ணும் உணவில், பழச்சாறு மற்றும் அருந்தும் நீரில் கலக்கப்படுவதாக அனைவரும் அறிவர் ஆனால் மேலும் சில வகைகளில் உங்களுக்கு எதிரிகளால் கொடுக்கபடுகிறது, உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் பரிசு பொருள்களில் வாசனை திரவியத்தில் இடுமருந்து கலக்கபடுகிறது, மொய்யாக கொடுக்கப்படும் ரூபாய் தாள்களிலும் தடவி கொடுக்கப்படுகிறது, ஆகவே நாம் சற்று உஷார் நிலையில் இருத்தல் அவசியம்.   ஒரு நீண்ட நாள் எ

கருவண்டு வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்?

படம்
அன்பு,பாசம்,நேசம் எல்லாம் சீர்கெட்டு அனைத்தும் சீரழிந்த கலியுகத்தில் நாம் வசித்து வருகிறோம், ஜோதிடர்கள் மற்றும் மத குருமார்களின் கூற்றுப்படி தற்போது நடப்பது கலியுகமாக கருதப்படுகிறது , இங்கு கொலை, கொள்ளை,போர்கள் மிக சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது ஆகவே நான் சற்று கவனமுடன் இருத்தல் அவசியம், இறைவனை உதாசீனப்படுத்துவது மிக தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.  கடந்த சில வருடம் முன்பு ராஜ நடைபோட்டு சிங்கத்தின் தோரணையோடு வீற்றிருந்த எங்கள் பாசமிகு தந்தை அவர்கள் தான் கடனாக குடுத்த பணத்தை திரும்பி கேட்ட போது கடன் வாங்கியவர்களால் ஏவல் பில்லி சூனியம் செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் கொல்லப்பட்டார், அவருக்கு ஏவல் வைக்கப்பட்ட நேரத்தில் வீட்டில் பல்வேறு கெட்ட சகுனங்கள் தோன்றின வீட்டு தரையில் விரிசல், நீண்ட நாளாக இருந்த கண்ணாடி திடீரென்று உடைந்து நொறுங்கியது, இரவில் நாய்கள் அழுதல், இரவு தோறும் பெண் அழும் குரல் முதலிவை மற்றும் தீரா பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தன, இறுதியாக அவர் இறப்பதற்கு முந்தைய நாள் எங்கள் வீட்டிற்குள் கருவண்டு ஒன்று புகுந்தது, என்னவென்று புரியாமல் நாங்கள் வ

ஜாம்பி வைரஸ் இலுமினாட்டிகள் சதியா? zombie virus in tamil

படம்
 48500 வருடம் முன்பு உயிருடன் பனிக்கடியில் புதையுண்ட ஜாம்பி வைரஸ் மீண்டும் ரஷ்யாவில் உயிர்ப்பித்துள்ளது, இதனை பண்டோரா வகை வைரஸ் என ரஷ்யாவை சேர்ந்த ஆராச்சியாளர்கள் அழைக்கின்றனர். அதிக குளிர் நிறைந்த பகுதியான சைபீரியாவில் பனிக்கட்டிகள் இடையில் பெர்மா பிரோசட் என்ற இடத்தில் உள்ள சிறிதளவில் உள்ள மண்ணில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஜாம்பி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது,அடர்த்தியான இந்த பனி புவி வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி கொண்டிருப்பதால் இந்த வைரஸ் தென்பட்டுள்ளது, இங்கிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு கிருமிகளின் ஆய்வில் பதிமூன்று கிருமிகள் சில ஆராய்ச்சியின் முடிவில் உயிர் பெற்றது, இந்த வைராசல் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர் ஆனாலும் உலகம் மென்மேலும் வெப்பம் அடைய நேரிட்டால் நினைத்து கூட பார்க்கமுடியாத உக்கிரமான கிருமிகள் மீண்டும் உயிர் பெற்று மனித குலத்துக்கு கேடு உண்டாக்க கூடும் என ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர், இந்த வைரஸ் மீண்டும் உயிர் பெற்றதால் ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் சில இணையதளவாசிகள் மற்றும் போலி நபர்களால் இந்த கிருமி தொற்றால்  அனைவரும் சிதைந்த

உதயா சுமதி மரணம் -udhaya sumathi death | கண் திருஷ்டி

படம்
 டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்த தம்பதிகள் பலர் இருப்பினும் நம்மால் என்றென்றும் மறக்க முடியாத தம்பதி என்றால் அது நிச்சயம் உதயா சுமதியாக தான் இருக்கும், எப்போதும் புன்னகை தவழும் முகமாக காட்சி அளிக்கும் உதயா மற்றும் கணவனை அன்பால் கட்டி இழுக்கும் அவரது மனைவி சுமதி இருவரும் டிக் டாக்கில் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தனர், இந்த தம்பதிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது, திருமணம் செய்து கொண்டது ,வளைகாப்பு, பிறந்தநாள், கோவில் செல்வது என அனைத்தையும் டிக் டாக்கில் பதிவு செய்து வருமானம் மற்றும் புகழ் அடைவது இவர்களின் முழு நேர பொழுதுபோக்காக மாறியது, அமைதி சுபாவம் கொண்ட உதயாவை அடிக்கடி கொஞ்சி வீடியோ செய்து வெளியிடும் உதயாவின் மனைவி சுமதியை ரசிக்கும் ரசிக கூட்டமும் இருக்கையில் இந்த ஜோடியை கண்டு பொறாமை பட்டவர்கள் அதிகம் என கூறலாம், ஒரு புறம் பரிசு பொருட்களை பிரபலப்படுத்தும் வேலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிசியாக இந்த தம்பதிகள் இருந்து வந்தனர், இவர்களின் வருமானமும் அதிகரிக்க அதிகரிக்க, அனைத்து கண் திருஷ்டிகள் இவர்கள் மீது பட துவங்கியது, மிக இளம் வயது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)