ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

உதயா சுமதி மரணம் -udhaya sumathi death | கண் திருஷ்டி

 டிக் டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்த தம்பதிகள் பலர் இருப்பினும் நம்மால் என்றென்றும் மறக்க முடியாத தம்பதி என்றால் அது நிச்சயம் உதயா சுமதியாக தான் இருக்கும், எப்போதும் புன்னகை தவழும் முகமாக காட்சி அளிக்கும் உதயா மற்றும் கணவனை அன்பால் கட்டி இழுக்கும் அவரது மனைவி சுமதி இருவரும் டிக் டாக்கில் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் அடைந்தனர், இந்த தம்பதிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது, திருமணம் செய்து கொண்டது ,வளைகாப்பு, பிறந்தநாள், கோவில் செல்வது என அனைத்தையும் டிக் டாக்கில் பதிவு செய்து வருமானம் மற்றும் புகழ் அடைவது இவர்களின் முழு நேர பொழுதுபோக்காக மாறியது, அமைதி சுபாவம் கொண்ட உதயாவை அடிக்கடி கொஞ்சி வீடியோ செய்து வெளியிடும் உதயாவின் மனைவி சுமதியை ரசிக்கும் ரசிக கூட்டமும் இருக்கையில் இந்த ஜோடியை கண்டு பொறாமை பட்டவர்கள் அதிகம் என கூறலாம், ஒரு புறம் பரிசு பொருட்களை பிரபலப்படுத்தும் வேலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிசியாக இந்த தம்பதிகள் இருந்து வந்தனர், இவர்களின் வருமானமும் அதிகரிக்க அதிகரிக்க, அனைத்து கண் திருஷ்டிகள் இவர்கள் மீது பட துவங்கியது, மிக இளம் வயது ஜோடிகள், இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதை எதிர்மறை ஆற்றல் கொண்ட கெட்ட நபர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை, இவ்வளவு சீக்கிரம் உதயா சுமதி செல்வம் ஈட்டியதும் பல கெட்ட கண்களால் ஏற்க முடியவில்லை, இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அத்துணை கண் திருஷ்டிகளின் பலனாக உதயா பெரும் விபத்தில் சிக்க நேரிட்டது, மாதங்கள் பல சென்றும் சிகிச்சை பலன் இல்லமால் உதயா இறக்க நேரிட்டது, முன்னோர்கள் கண் திருஷ்டி குறித்த அச்சம் முன்பு நம்மிடையே தொடர்ந்து வந்தது ஆனால் இன்று பலர் அதை மூட நம்பிக்கை என்று கூறி விட்டு பின்பு அதன் பலனை கண்டு கதறுகின்றனர், சிந்தியுங்கள் நாம் கலியுகத்தில் வசிக்கிறோம் நம்மை கெட்ட கண்கள் உற்று நோக்குகின்றன, நீங்கள் கர்ப்பமாக இருப்பதையோ, மகிழ்ச்சியாக உணவு உண்பதையோ, மிகவும் வசதியுடன் வாழ்வதை சபிக்கும் சக்திகள் பெருகி விட்டது, கர்ப்பிணிகளை மலடி சாபமும், தம்பதிகளை முண்டை பார்வையும், வசதி படைத்தவர்களை வன்கண் திருஷ்டியும் பாதிக்கும், இதிலும் உதயா மற்றும் சுமதியை பாதித்தது முண்டைகள் பார்வையும், வன்கண் திருஷ்டியும் என கூறலாம், ஆகவே கண் திருஷ்டிகள் விலக என்ன செய்ய வேண்டும் என குல 


தெய்வம் கோவில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.ஓயாத கண்திருஷ்டியால் இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் சண்டைகள் , பிரிவு மரணம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது ஆகவே நாம் விழிப்புடன் செயல்பட்டு பரிகாரம் தேடிக்கொள்ளுதல் அவசியமாகிறது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)