இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

வீட்டில் மூங்கில் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்| Bamboo plant Benefits

படம்
ஃபெங் சுய் வாஸ்து முறையில் அதிர்ஷ்டத்தை தரும் மூங்கில் ஒரு பிரபலமான தாவரமாகும், ஏனெனில் அது ஆசியாவுடனான தொடர்புடைய தாவரம், அத்துடன் அதன் பயன்பாடு,எளிமை,அழகு, முதலிய காரணங்களால் மக்களிடையே பிரசித்தி பெற்றது. மூங்கில் இயற்கை சுத்திகரிப்பானாக விளங்குகிறது காற்றிலிருந்து நச்சை பிரித்து சுவாசிக்கும் காற்றை தூய்மைபடுத்துகிறது. மூங்கிலின் சிறப்பம்சங்கள்: மூங்கில் செடியை வீட்டில் வளர்ப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் வீட்டிற்கு பாதுகாப்பையும் தருகிறது. மூங்கில் தாவரம் நெகிழ்வு தன்மை,வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது. இதன் அமைப்பு பஞ்ச பூதத்துடன் தொடர்புடையதால் இது இணக்கமான பிரபஞ்சத்தின் அடித்தளமாக கருதப்படுகிறது. தொழில் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவதால் அலுவலங்களில் மேஜைகளில் மூங்கில் தாவரம் வளர்க்கப்படுகிறது. காதல்,மகிழ்ச்சி,உறவு,பணம் ஆசீர்வாதம்,நேர்மறை ஆற்றல் முதலியவற்றிக்காக மூங்கில் வளர்க்கபட்டு வருகிறது. மூங்கில் " சீ " ஆற்றலை (Chi energy) வெளியிடுவதால் நல்ல நேர்மறை ஆற்றல், செல்வ செழிப்பிற்கு, மன அமைதிக்கு உதவுகிறது. மூங்கில் செடியை  உணவருந்தும் மேஜைக்கு நடுவில்

சுவிட்ச் வேர்ட்ஸ் என்றால் என்ன? சுவிட்ச் வேர்ட்ஸ் பயன்படுத்தும் முறை? (how to use switch words in Tamil)

படம்
நமது ஆழ் மனதிற்குள்  விரும்பியவற்றை எளிதாக பதிவு செய்ய நாம் சுவிட்ச் வேர்ட்ஸ் பயன்படுத்துகிறோம். எளிதாக கூறவேண்டுமானால், மின் விசிறியை உபயோகிக்க, தொலைக்காட்சியை ஆன் செய்ய நாம் மின் பொறியை தட்ட வேண்டும், இவை இரண்டும் ஒரே மின் இயக்கத்தில் இயங்குபவை, இது போலவே நம்மிடம் இயங்கி கொண்டிருக்கும் ஒரே ஆற்றலை பயன்படுத்தி விரும்பியதை அடைவதே சுவிட்ச் வேர்ட்ஸ் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அது "சிங்கள் வேர்ட் அபர்மேஷன்" ஆகும். சுவிட்ச் வேர்ட்ஸ் எப்படி பயன்படுத்துவது? (How to use Switch words) நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ, அதற்க்கான சுவிட்ச் வேர்ட்ஸ்யை சொல்லிக்கொண்டே 108 தடவை ஒரு காகிதத்தில் எழுதுங்கள், ஒவ்வொரு முறை எழுதும் போதும் நீங்கள் விரும்பியதை அடைந்து விட்டது போல் எண்ணி எழுதுங்கள்.  சக்திமிக்க சுவிட்ச் வேர்ட்ஸ்: பணத்தை ஈர்க்க பயன்படுத்த வேண்டிய வார்த்தை COUNT மன அமைதி நேர்மறை ஆற்றல் முதலியவற்றிற்கான வார்த்தை DIVINE எதிர்மறை ஆற்றல் தீய பழக்கம் கெட்ட சிந்தனை முதலியவற்றை உடனடியாக நீக்க CANCEL காதல் மற்றும் சீரான உறவு முறைகளுக்கு TOGETHER வாழ்வில் அற்புதங்களை காண்பதற்கு RAINBOW மன

ஆழ்மனதின் சக்தி மூலம் விரும்பும் வேலையை ஈர்ப்பது எப்படி?(how to Law of Attraction for attracting Desired Job)

படம்
இன்றைய சூழலில் பலர் தங்கள் பணிபுரியும் இடங்களில் நெருக்கடியான சூழலில் விருப்பமின்றி பணிபுரிவதும்,  சிலருக்கு வேலை வாய்ப்பு ஏதும் அமையாமல் அவதிப்பட்டும் வருகின்றனர், நாம் விருப்பமின்றி செய்யும் எந்த ஒரு விஷயமும் நமக்கு மகிழ்ச்சியான மனநிலையை தராது. இந்த கடினமான சூழலை மாற்றி விரும்பிய வேலையை அடைவது எப்படி என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். எப்படி பட்ட வேலை வேண்டும்? உங்கள் கனவு வேலையை அடைவதற்கான முதல் படி உங்களுக்கு என்ன வேலை என்று தீர்மானிப்பதாகும். ஏனெனில் உங்களிடம் இலக்கு இல்லாவிடில் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது. கனவு வேலையை எட்டு நாட்களில் அடைய செய்யும் ஈர்ப்பு விதி சட்டம்: இந்த எட்டு நாட்களிலும் உங்களது முழு கவனமும் உங்களது கனவு வேலையை சார்ந்தே இருக்க வேண்டும்.  காற்றோட்டமான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளவும் அது இரவோ அல்லது பகலோ நீங்கள் சௌகர்யமாக இருந்தால் போதுமானது. உங்கள் கண்களை  மூடி கொள்ளவும், முதல் ஐந்து நிமிடங்கள் எந்த எதிர்மறை சிந்தனைகளும் மனதில் புகாதவாறு மனதை கவனித்து கொள்ளவும், இப்போது நாம் மன காட்சிபடுத்துதலில் நமக்கு பிடித்த வேலை ஏற்கனவே கிடைத்து விட்டது போன்று கற்பனை செய

பிடித்த நபரை ஈர்க்க-காதல் மற்றும் உறவுக்கான ஈர்ப்பு விதி (Law of Attraction in Tamil By Marie Diamond)

படம்
ஒரு நாள் பெங் சுயி நிபுணரான மேரி டைமென்ட், ஒரு திரைப்பட இயக்குனரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் போது சுற்றி இருந்த ஓவியத்தை கவனித்து பார்த்தார், அந்த இயக்குனரின் ஓவியங்கள் அனைத்தும் ஒரு பெண் தனியாக முகத்தை திருப்பி கொண்டிருப்பதை போன்று வரைய பட்டிருந்தது, இதனை கண்ட மேரி டைமென்ட் , இயக்குனரிடம் உங்கள் காதல் வாழ்க்கை சிக்கலாக உள்ளதா? என்று வினவினார்! சற்று அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மேரி டைமென்ட்'யிடம் ஆம் சிக்கலாக உள்ளது உங்களுக்கு எப்படி தெரியும் என்றார். உடனே மேரி டைமென்ட் சுற்றி இருக்கும் ஓவியத்தை சுட்டி காட்டி இயக்குனரிடம் உங்கள் படைப்பு திறன் முழுதும் உங்கள் ஓவியத்தில் விதைக்கபட்டுள்ளது, நீங்கள் வரைந்த ஓவியத்தில் பெண் தனியாகயும், முகத்தை உங்களிடமிருந்து திருப்பி கொண்டிருப்பது போன்று வரையப்பட்டிருப்பது ஒரு முரண் பாடான ஒன்று, மேலும் நீங்கள் இந்த ஓவியங்களை நீக்கி விட்டு மூன்று பெண்கள் உங்களை பார்த்து ரசிப்பது போல் வரையுங்கள் என்றார், இயக்குனர் தனது எண்ணங்களில் மாற்றம் செய்து அதன் படி செய்தார். பின்னர் ஆறு மாத காலத்திற்கு பின் மீண்டும் மேரி, இயக்குனரை சந்தித்து காதல் வாழ்க்கை கு

தேவதை எண்களும் அவை உணர்த்தும் அர்த்தங்களும்.

படம்
நாம் தேவதைகளை நேரடியாகப் பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. தேவதைகள் ஒருபோதும் உங்கள் முன் தோன்ற மாட்டார்கள், தேவதைகள் சில அறிகுறிகள் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்  என்று கேட்கிறார்கள். தேவதைகளுடன் தொடர்பு கொள்ள மிகவும் சாத்தியமான வழி, எண்கள் மூலம் கிடைக்கிறது என்று ஆன்மீகவாதிகள் நம்புகிறார்கள். தேவதைகள் நமக்கான எண்களை அனுப்புகிறார்கள்,  அந்த எண்ணை கொண்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு குறிப்பிட்ட எண் உங்களைப் பின்தொடர்ந்தால், அதை எல்லா இடங்களிலும் காண்கிறீர்கள் என்றால், உங்கள் தேவதைகள் உங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள், உங்கள் தேவதைகள் உங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கேட்க சரியான நேரம் வந்துவிட்டது. உங்கள் வாழ்க்கையில் வந்த எண்ணின் அர்த்தம் உங்களுக்குத் தெரிந்தால், தேவதைகளிடமிருந்து வரும் செய்தியைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். தேவதைகள் உங்களுக்கு எண் 1111 ஐ அனுப்புகிறார்கள், நேர்மறை வாழ்விற்கான சாவி  உங்களுக்கு முன்னால் இருக்கிறது, அதை நீங்கள் அடையாளம் காண முடியும். இந்த எண்ணைப

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

படம்
தண்ணீர் நமது கிரகத்தில் காணப்படும் மிக முக்கியமான இயற்கை கூறுகளில் ஒன்றாகும். தண்ணீர் இல்லாமல்  மனித இனத்தால் ஒரு போதும் வாழ முடியாது , இந்த உண்மையை சிந்திக்கும்போது  தண்ணீர் எவ்வளவு முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.நீர் அருந்தாது மனிதரால் மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்.  நமது புவியும் நமது உடலும் சுமார் பங்கு 70% தண்ணீரால் ஆனது. தண்ணீரின் ஆற்றல் அதன் தன்மை, நோக்கங்கள்,  முக்கியத்துவம் பற்றிய சரியான புரிதலை பெறுவதன் மூலம், நாம் விரும்பும் எதையும் அடைய தண்ணீரைப் பயன்படுத்தி பல்வேறு சக்தி மிக்க நுட்பங்களைக் கற்றுக்கொள்வது எப்படி? என்பதை இந்த பதிவில் காண்போம். தண்ணீர் மற்றும் ஈர்ப்பு விதி சட்டம்: தண்ணீரின் புனித தன்மை இயல்பான ஒன்று, அது பண்டைய காலங்களில் இருந்தே போற்றப்பட்டும், உபயோகப்படுத்தப்பட்டும்  வருகிறது. பண்டைய கோவில்களிலும் நீர் நிலைகளிலும் ஞானஸ்தானம் எடுப்பது மற்றும் குளக்கரைகளில் சில சடங்குகள் செய்யும் போது நீரில் முங்குவது முதலியன தண்ணீரின் புனிதத்துவத்தை அடையாளப்படுத்துவதாக உள்ளது.  ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சியாளர் Dr.மச

பிரிந்த காதல் சேர-Kadhal Vasiya Mandhiram (Love Vashikaran)

படம்
முரண்பாடான செயல்கள், தேவையற்ற விவாதங்கள், கருத்து வேறுபாடு, மாற்று சிந்தனைகள் போன்ற காரணங்களால் இன்றைய காலகட்டத்தில் காதல் கைகூடாமல் போனவர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. முரண்பாடுகளை கலைந்து பிரிந்து சென்ற காதலை மீண்டும் உங்கள் வாழ்வில் சேர்க்கவும்,முன்னாள் காதலரை மீண்டும் கவர்ந்து இழுக்கவும், ஒருதலை காதல் உடனடியாக கைகூடவும், பயன்படுத்தப்படும் ரகசியம் மற்றும் அதற்கான மந்திரம். ஒருவரை நீங்கள் உண்மையாகவே நேசிக்கிறீர்கள், அவர்களையே திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்றால் அவர்களை உங்கள் வசம் கொண்டு சேர்க்கும் மகா சக்தி கொண்ட மந்திரம், இந்த மந்திரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். மந்திரம்: "ஓம் நமோ காமாக்ஷீ தேவியே ஆமுகி (விரும்பும் நபர் பெயர்) மே வசம் மே குரு குரு ஸ்வாஹா" இந்த மந்திரத்தை இரவு மற்றும் பகல் என மூன்று நாட்களுக்கு 108 முறை ஜெபித்து வரவும் அடுத்த 48 மணி நேரத்தில் பலன் கிடைக்கும். குறிப்பு : இந்த மந்திர உச்சரிப்பு குறித்து யாரிடமும் பகிர கூடாது. மந்திரத்தை தூய உள்ளத்துடன் உச்சரிக்கவும். மாற்று சிந்தனைகள் அறவே கூடாது. மூன்று நாட்களுக்கு அசைவ உணவை தவி

குபேர முத்திரை செய்வது எப்படி? குபேர முத்திரை நன்மைகள்(Kubera Mudra Benefits in Tamil)

படம்
குபேர முத்திரை என்பது நமது விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு யோக கை முத்திரை. உண்மையில், " குபேரன் " என்பது இந்துக்களின் செல்வ செழிப்பிற்கான கடவுளை குறிக்கிறது.இதன் மூலம் பஞ்ச பூதங்களின் அருள் கிட்டும். குபேர முத்திரை பயிற்சி செய்யும் போது, ​ ஆள்காட்டி, நடுத்தர மற்றும் கட்டைவிரல் நுனியை இணைப்பதன் மூலம் நமது எண்ணங்களின் சக்தியைப் பயன்படுத்த முடியும். இது செழிப்பு, மற்றும் கோடீஸ்வர யோகத்தை நமக்கு தருகிறது. குபேர முத்திரை செய்யும் போது  விரல்களை ஒன்றாக இணைப்பதன் மூலம்,  பிரபஞ்சத்திற்கு ஆற்றல் செல்கிறது, இது நீங்கள் விரும்பிய ஒன்றை உங்களிடம் கொண்டு சேர்க்கும்,நீண்ட நாள் விருப்பம் ஒன்றை நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. குபேர முத்திரை நம்பிக்கையையும், சுயமரியாதையையும்,பண யோகத்தையும் உருவாக்குகிறது. குபேர முத்திரையில் பயன்படுத்தபடும் மூன்று விரல்களின் செயல்பாடு எதைக் குறிக்கின்றன? கட்டைவிரல் - 'தீ-யை குறிக்கின்றது ' இது செவ்வாய் கிரகத்தின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளதால். , தன்னம்பிக்கை,தைரியம், தலைமைத்துவ திறமைகள் ( Leadership ) மற்றும் உடல் வலிமையை அளிக்கிறது. ஆள்காட்டி விரல

உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? செய்வினை,ஏவல்,பில்லி சூனியங்களை முறிக்கும் ஆஞ்சநேய மந்திரம்(remove Evil spirits)

படம்
செய்வினைக்கான அறிகுறிகள் : கெட்ட கனவுகள் அடிக்கடி  தோன்றுதல், உதாரணமாக நீங்கள் கொலை செய்யப்படுவது போன்றும், உங்களை யாரோ உயரத்திலிருந்து தள்ளிவிடுவது போன்றும்,நோய்வாய்படுவது போன்றும் கனவுகள் வந்து கொண்டே இருக்கும். தொழிலில் தொடர் தோல்விகள், எந்த நேரமும் மன சோர்வு பசியின்மை,அடிக்கடி உடல் நலம் குன்றுதல்,முகத்தில் வசீகரம் குறைந்து பொலிவற்று காணப்படுதல்,தலை முடி உதிர்தல்,தேவையற்ற பயம் எதிர்மறை சிந்தனைகள் முதலியன. உங்கள் உணவில் செய்வினை,வசிய பொடி உங்களுக்கு தெரியாமல் கலக்க பட்டிருக்கும் என அச்சம் இருந்தால்,அதற்கு ஒரு வழி இருக்கிறது. முருங்கை சாற்றை பிழிந்து உங்கள் உள்ளங்கைகளில் சிறிது நேரம் வைத்து கொள்ளுங்கள்,அது சிறிது நேரத்தில் கெட்டி ஆகிவிட்டால் உங்களுக்கு யாரோ உணவில் வசியம் வைத்து உள்ளனர் என்று தெரிந்து விடும். இது தெரிந்த பின், சாமி முன்பு வைக்க பட்ட எலுமிச்சை சாற்றை பிழிந்து அருந்தினால் துர் வசியம் கலைக்கபடும். பக்கத்து வீட்டுகாரர்,தொழில் போட்டி,பொறாமை என்று இருப்பவர்கள் வீட்டில் உணவருந்துதல் தவிர்க்கபட வேண்டிய ஒன்று. மேலும் உங்கள் பழைய ஆடை மற்றும் சில பொருட்களை தானம் செய்வது தவிர்த்த

மோகினி வசியம்-பிரிந்த காதலை மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் மந்திரம் (Love Mantra)

படம்
மோகினி வசீகர மந்திரம் ஒரு சக்திவாய்ந்த மந்திரமாகும், இது உங்கள் இழந்த காதலை, பிரிந்து சென்ற கணவரை அல்லது மனைவியை உங்கள் வாழ்க்கையில் மீண்டும் கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த மந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காதலுக்கான இந்த பண்டைய கால மோகினி வசீகர மந்திரம் எந்த ஒரு ஆண், பெண்களையும் உடனடியாகக் கட்டுப்படுத்த கூடியது. இந்த மோகினி மந்திரம்,காதலரை ஈர்க்க, முன்னாள் காதலை நிரந்தரமாகத் திரும்பப் பெற போதுமானது, "மோகினி வசீகர மந்திர" நடைமுறையைப் பற்றி இந்தப் பதிவில் படிக்கலாம் மேலும் காதல் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைப் பெற சுய பயிற்சி மூலம் இதைச் செய்யலாம். மந்திரம் : "ஓம் நம பகவதே சர்வ லோகன் மோஹ்யே மோஹ்யே ஸ்வாஹா ஓம் நம: நம: சித்தி மோகினி வாசிகரன் நம நம ஸ்வாஹா" குறிப்பு : வட திசையில் அமர்ந்து இம்மந்திரத்தை காலை மற்றும் இரவில் உறங்கும் முன்னர் 108 முறை பயன்படுத்த வேண்டும்.மந்திரம் உச்சரிக்கும் போது உங்கள் கவனம் முழுதும் உங்கள் சிதறாமல் இருத்தல் வேண்டும். உடலை போல உளமும் தூய்மையாக இருத்தல் அவசியம். இந்த ஏழு நாட்களில் அசைவ உணவுகள்,சுய இன்பம்,புகை பிடித்தல் முதலிய பழக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)