இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

ஆவிகள் உலகம் | அமானுஷ்ய அனுபவங்கள் (Real Life Haunted House Stories)

படம்
மணிமாறன் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வந்தான், ஆவி, பேய்கள் குறித்த ஆராய்ச்சி என்றால் அவனுக்கு அலாதி பிரியம், தன் நண்பர்களை அழைத்து ஆபத்தான மற்றும் கைவிடப்பட்ட பழைய இடங்களுக்கு சென்று பேய்களை தேடுவான் எனினும் இதுவரை எந்த ஒரு பேய் இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை என வருத்தமுற்றான், ஒரு நாள் கல்லூரி நண்பன் ஒருவன் மூலம் " ஆவிகளுடன் பேசும் முறை " என்ற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டான், அந்த புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, பின்னர் ஒரு வயதான மந்திரவாதியிடம் அந்த புத்தகம் இருப்பதை தெரிந்துகொண்டு அவரை தேடி சென்றான் மணிமாறன், ஆனால் மந்திரவாதி அந்த புத்தகத்தை தர மறுத்து மணிமாறனை விரட்டினார், எப்படியாவது அந்த புத்தகத்தை திருடிவிட முடிவெடுத்தான் மணிமாறன், இதனால் மந்திரவாதி புத்தகத்தை வைக்கும் இடத்தை அவருக்கு தெரியாமல் நோட்டமிட்டு வந்தான், ஒரு நாள் மந்திரவாதி காலைநேரம் நீராட சென்ற விட மணிமாறன் புத்தகத்தை எடுத்து சென்று ஓடிவிட்டான்.நீராடி முடித்த மந்திரவாதி தனது அறையை சுற்றி வருவது வழக்கம், அப்போது ஜன்னல் வெளி பகுதியில் திறந்து கிடப்பதையும், தன் புத்தகம் திருடப்பட்டு போனத

கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? What is the true meaning of karma

படம்
கர்மா என்றல் என்ன? கர்மா என்பது ஒரு நபர் செய்யும் செயல்களின் விளைவாகும். இது காரணம் மற்றும் விளைவு சுழற்சியைப் பற்றிய ஒன்று . கர்மாவின் கோட்பாட்டின் படி, ஒரு நபருக்கு என்ன நேர்கின்றதோ, அது அவர்களின் செயல்களால் ஏற்படுகிறது. ஒரு நபர் ஏதாவது நல்லதைச் செய்தால், அந்த நபரின் நேர்மறையான செயல்கள், நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்,அதை நல்ல கர்மா என்று விவரிக்கலாம். ஒரு குடும்பத்தை அழிக்கவோ அல்லது ஒருவருக்கு தீங்கை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் நபருக்கு தீமை தரும் விதத்தில் கர்மா அமையும் என விவரிக்கபடுகிறது. சம்பவம் :  ஆவடியை சேர்ந்த வழக்கறிஞர் சுதாகர் பல மோசடிகளுக்கு புகழ்பெற்றவன், பல சமூக விரோதிகளுடன் இணைந்து பல மோசடிகளை செய்து வந்தான், பட்டா இல்லாத நிலங்களை ஆக்கிரமித்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது அவன் வழக்கம்,  அப்பாவி குடும்பங்களை ஏமாற்றி ஏப்பம் விட்டு சாபத்தை சம்பாதித்து வந்த இவனுக்கு அரசு நிலத்தையும் அபகரிக்க கொள்ளை ஆசை, வழக்கறிஞர் என்பதால் சில உள்ளூர் அரசியல் பெருச்சாளிகளை கைக்குள் போட்டுகொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வான், அதன் மூலம் ஒரு தொகையை பெற்றுக்கொள்வான். இவனுக்கு நெருங்

வீட்டில் மூங்கில் செடி வைப்பதன் நன்மைகள் | மூங்கில் செடி பயன்கள் | ஃபெங் சுய் மூங்கில் (How to use Lucky bamboo for good Feng shui)

படம்
ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, மூங்கில் செடிகள் மிகவும் அதிர்ஷ்டம் மற்றும் மங்களகரமானவை. வீட்டில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் மூங்கில் செடிகளை வளர்த்து பராமரிப்பது அதிர்ஷ்டம்,  மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்று கருதப்படுகிறது. காலப்போக்கில், மூங்கில் செடிகள் வீட்டு தாவரமாக உட்புற சாகுபடிக்கு அனுமதிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. இன்று, மூங்கில் செடிகள்  பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன, அவை மூங்கில் மரக்கட்டைகளை அடுக்கி, சிவப்பு நாடாவுடன் ஒன்றாகக் கட்டி, தண்ணீர், கூழாங்கற்கள் மற்றும் கண்ணாடி குவளையில் வைக்கப்படுகின்றன. நர்சரிகள் மற்றும் பரிசுக் கடைகள் போன்ற இடங்களில் அதிர்ஷ்டம் தரும் பொருளாக மூங்கில் விற்கப்படுகின்றன. மூங்கில் தாவரங்களின் நன்மைகள்: இது ஒரு வெப்பமண்டல நீர் லில்லி வகை தாவரமாகும், இது மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது: மூங்கில் குருத்து பாதவலியை போக்கி நிவாரணம் அளிக்கிறது.  சீனா போன்ற பல்வேறு நாடுகளில் மூங்கிலே மக்களின் வாழ்வாதாரமாய் கருதப்படுகிறது. இயற்கையாகவே காற்றை சுத்தப்படுத்துவதால், மூங்கில் சுற்றுச்சூழல் தூய்மைக்கு சிறந்த பங்களிக

கனவுகளை அலட்சியம் செய்யாதீர்கள் | hidden meanings behind the dreams in Tamil

படம்
ஆராச்சியாளர்களாலும், சோதிடர்களாலும் ஒரே விஷயம் தெளிவாக கூறப்பட்டுள்ளது இரவில் உறங்கும் போது கனவு காண்கிறோம்,இந்த கனவானது ஆழ்மனத்துடன் தொடர்புடையது. இரவில் காணும் சில கனவுகள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும் எனில் அவை வெறும் சாதாரண கனவாக கருதப்படுகிறது. ஆனால் நாம் காணும் கனவில் காணும் இடங்கள்,மனிதர்கள்,செய்கைகள் ஆகியவை நாள் முழுதும் மறக்காது நினைவில் நிற்குமாயின் அது சாதாரண ஒன்றாக இல்லாமல் எதோ ஒன்றை உணர்த்துகிறது அல்லது எச்சரிக்கை செய்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும், இப்படிபட்ட கனவுகளை ஒருபோதும் அலட்சியபடுத்த கூடாது, உடனே குலதெய்வத்தை பிராத்தனை செய்வது மிக முக்கியம். இறந்தவர்கள் கனவில் வந்தால் : நமது முன்னோர்கள் நமது கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும், நம்மை நேசித்த ஒருவர் இறந்து போவது போல் கனவு வந்தால் துன்பங்கள் விலகி போகிறது என உணர்த்துகிறது, இறந்து போன உங்கள் எதிரிகள் கனவில் வந்தால் நீங்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க எச்சரிக்கிறது. கர்ப்பமாக இருப்பது : பெண்கள் தங்கள் கனவில் கர்ப்பமாக இருப்பது போன்று கண்டால் அவர்களுக்கு பதவி உயர்வு அல்ல

புகைப்பட வசியம் | photo vaithu vasiyam seivathu eppadi in tamil | Vasiyam

படம்
காதலர்களாகவோ அல்லது கணவன் மனைவியாக இருப்பவர்கள் இந்த புகைப்பட வசியத்தை பின்பற்றி பயன்படுத்தலாம். வேறு ஒருவரின் துணை மீது இந்த போட்டோ வசியம் செய்தல் கூடாது அது பலன் அளிக்காது. இந்த முறையை பின்பற்றுவோர் புகை பிடித்தல், மது அருந்துதல் முதலிய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் மேலும் இந்த பூஜை முடியும் வரை மாமிச உணவு முறைகளை உண்ணுதல் கூடாது. மனதை கட்டுக்குள் அடக்கி செய்யவேண்டிய பூஜை முறை இது, காதலர்கள் மற்றும் கணவன் மனைவி இடையே எப்போதும் சண்டை சச்சரவுகள், தீராத மனக்கசப்புகள், போராட்டங்கள் நிலவி வந்தால் இந்த தாந்திரிக முறை நல்ல பலன் அளிக்க வல்லது. நாட்டு மருந்து கடைகளில் 6×6 என்ற விகிதத்தில் கிடைக்கக்கூடிய செப்பு தகடுகளை வாங்கி வந்து, அந்த தகட்டில் ஒரு முக்கோணத்தை வரைந்து கொள்ளவும் அந்த முக்கோணத்தின் உள்ளே உள்ள மூன்று முனைகளிலும் வசி வசி என்று எழுதவேண்டும், அந்த முக்கோணத்தின் உள்ளே ஒரு வட்டத்தை வரைந்து கொள்ளவும் அந்த வட்டத்தின் நடுவில் ஓம் ஹ்ரீம் ஸ்ரீரிம் (நபரின் பெயர் சேர்த்து) வசி வசி சுவாஹா என்று எழுதவும் முக்கோணத்தின் வெளிப்புறம் மூன்று முனைகளிலும் வசியம் செய்யப்படவேண்டியவரின் ப

பணக்காரன் ஆவது எப்படி? எந்தெந்த வழிகளில் சாத்தியம்? (Getting rich soon)

படம்
பெரும்பாலான மக்கள் செல்வந்தர் ஆக விரும்புகிறார்கள், ஆனால் சிலர் உண்மையில் அதனை அடைய தேவையான படிகளை புரிந்துகொள்கிறார் கள். பணக்காரர் ஆவதற்கு வாய்ப்பு, திறமை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் கலவை தேவை. பணக்காரர் ஆவதற்கு, நீங்கள் நிதி ரீதியாக பலனளிக்கும் ஒரு திட்டம் தொடர்பான பாதையில் இறங்க வேண்டும், பின்னர் சேமிப்பு, முதலீடு மற்றும் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நிர்வகிக்க வேண்டும். செல்வம் அடைவது கடினம் என்றாலும், கொஞ்சம் விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனமான முடிவெடுப்பதன் மூலம் அதை நம்மால் நிச்சயம் அடைய முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தல்: பங்குகள், பத்திரங்கள் அல்லது பிற முதலீட்டு வாகனங்கள் போன்ற பத்திரங்களில் நிதியை முதலீடு செய்யுங்கள், அவை ஓய்வூதியத்தின் போது உங்களுக்கு ஆதரவளிப்பதற்குப் போதுமான முதலீட்டின் மீதான வருடாந்திர வருவாயை (ROI) உங்களுக்கு வழங்கும். உதாரணமாக, நீங்கள் $1 மில்லியனை முதலீடு செய்து 7% நிலையான வருமானத்தைப் பெற்றால், உங்கள் ஆண்டு வருமானம் $70,000, பணவீக்கம் குறைவாக இருக்கும். உங்களுக்கு விரைவாக பணம் சம்பாதிப்பதாக உறுதி

செய்வினை வைப்பவனுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் கிடையாது | உண்மை சம்பவம் (real life Seivinai story)

படம்
ராஜன் ஒரு நடுத்தர வகுப்பை சேர்ந்தவர், மிகவும் நல்ல மனிதர்,அப்பாவி உள்ளம் கொண்டவர், ஆனாலும் கடுமையான உழைப்பாளி அவர் தன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார், அவரது லட்சியம் எப்படியாவது ஒரு சொந்த இல்லம் கட்டி தனது குடும்பத்துடன் குடியேறி விட வேண்டும் என்பதாக இருந்தது, இதற்காக அல்லும் பகலும் உழைத்து கொண்டே இருந்தார், ராஜன், சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு சென்னையில் பல இடங்களை வாங்க முற்பட துவங்கினார், ஒரு வழியாக சென்னை அயப்பாக்கத்தில் ஒரு அற்புதமான வீடு ஒன்று பேசி முடிக்கப்பட்டது, ராஜன் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார், நாற்பது வருட கனவாக இருந்த ஒரு விஷயம் தற்போது கைகூட போவதை எண்ணி மகிழ்ந்தார் ராஜன். வீட்டை விற்பவரிடம் பேச்சு வார்த்தை சுமூகமாக பேசி முடித்து விட்டு ஓலா கார் (ola cab) புக் செய்து இல்லம் திரும்ப முடிவு செய்தார் ராஜன், அதன் படி காரில் அமர்ந்த ராஜன் தன் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் வீடு குறித்து பேசினார், மேலும் தான் வைத்திருக்கும் ஐம்பது லட்சத்தை அடிக்கடி சுட்டிகாட்டி தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார், இதனை கவனித்து கொண்டே இருந்தான் காரின் ஓட்டுநர் ஆரோக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)