சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

வீட்டில் மூங்கில் வளர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்| Bamboo plant Benefits

ஃபெங் சுய் வாஸ்து முறையில் அதிர்ஷ்டத்தை தரும் மூங்கில் ஒரு பிரபலமான தாவரமாகும், ஏனெனில் அது ஆசியாவுடனான தொடர்புடைய தாவரம், அத்துடன் அதன் பயன்பாடு,எளிமை,அழகு, முதலிய காரணங்களால் மக்களிடையே பிரசித்தி பெற்றது.
மூங்கில் இயற்கை சுத்திகரிப்பானாக விளங்குகிறது காற்றிலிருந்து நச்சை பிரித்து சுவாசிக்கும் காற்றை தூய்மைபடுத்துகிறது.

மூங்கிலின் சிறப்பம்சங்கள்:

மூங்கில் செடியை வீட்டில் வளர்ப்பது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் வீட்டிற்கு பாதுகாப்பையும் தருகிறது.

மூங்கில் தாவரம் நெகிழ்வு தன்மை,வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை பிரதிபலிக்கிறது.

இதன் அமைப்பு பஞ்ச பூதத்துடன் தொடர்புடையதால் இது இணக்கமான பிரபஞ்சத்தின் அடித்தளமாக கருதப்படுகிறது.

தொழில் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவதால் அலுவலங்களில் மேஜைகளில் மூங்கில் தாவரம் வளர்க்கப்படுகிறது.

காதல்,மகிழ்ச்சி,உறவு,பணம் ஆசீர்வாதம்,நேர்மறை ஆற்றல் முதலியவற்றிக்காக மூங்கில் வளர்க்கபட்டு வருகிறது.

மூங்கில் "சீ" ஆற்றலை (Chi energy) வெளியிடுவதால் நல்ல நேர்மறை ஆற்றல், செல்வ செழிப்பிற்கு, மன அமைதிக்கு உதவுகிறது.

மூங்கில் செடியை 
உணவருந்தும் மேஜைக்கு நடுவில் வைப்பது வீட்டின் வளத்திற்கும்,படுக்கை அறையில் வைப்பது உறவு முறைக்கும், வீட்டை சுற்றி வளர்ப்பது நல்ல அமைதிக்கும் வித்திடுகிறது.

வளர்ப்பு முறை:
இதற்கு லேசான சூரிய ஒளியும் சிறிது நீரே போதுமானது .

வீட்டில் கிழக்கு மற்றும் தென் கிழக்கு நோக்கி மூங்கில் வளர்ப்பது அதிக பலன் தரும். 

2,3,5,8 அல்லது 9 மூங்கில் செடிகளை வளர்த்தல் நல்லது.

பழுப்பு மற்றும் அடர் பச்சை தண்டு காணப்படும் மூங்கில் செடி தவிர்க்கவும்.

வாரம் ஒரு முறை பழுத்த இலைகளை கத்தரித்து வரவும்.

சூரியனிடமிருந்து நேரடி கதிர் படாதவாறு பார்த்து கொள்ளவும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)