சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

பிடித்த நபரை ஈர்க்க-காதல் மற்றும் உறவுக்கான ஈர்ப்பு விதி (Law of Attraction in Tamil By Marie Diamond)

ஒரு நாள் பெங் சுயி நிபுணரான மேரி டைமென்ட், ஒரு திரைப்பட இயக்குனரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் போது சுற்றி இருந்த ஓவியத்தை கவனித்து பார்த்தார், அந்த இயக்குனரின் ஓவியங்கள் அனைத்தும் ஒரு பெண் தனியாக முகத்தை திருப்பி கொண்டிருப்பதை போன்று வரைய பட்டிருந்தது, இதனை கண்ட மேரி டைமென்ட் , இயக்குனரிடம் உங்கள் காதல் வாழ்க்கை சிக்கலாக உள்ளதா? என்று வினவினார்! சற்று அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மேரி டைமென்ட்'யிடம் ஆம் சிக்கலாக உள்ளது உங்களுக்கு எப்படி தெரியும் என்றார்.
உடனே மேரி டைமென்ட் சுற்றி இருக்கும் ஓவியத்தை சுட்டி காட்டி இயக்குனரிடம் உங்கள் படைப்பு திறன் முழுதும் உங்கள் ஓவியத்தில் விதைக்கபட்டுள்ளது, நீங்கள் வரைந்த ஓவியத்தில் பெண் தனியாகயும், முகத்தை உங்களிடமிருந்து திருப்பி கொண்டிருப்பது போன்று வரையப்பட்டிருப்பது ஒரு முரண் பாடான ஒன்று, மேலும் நீங்கள் இந்த ஓவியங்களை நீக்கி விட்டு மூன்று பெண்கள் உங்களை பார்த்து ரசிப்பது போல் வரையுங்கள் என்றார், இயக்குனர் தனது எண்ணங்களில் மாற்றம் செய்து அதன் படி செய்தார்.
பின்னர் ஆறு மாத காலத்திற்கு பின் மீண்டும் மேரி, இயக்குனரை சந்தித்து காதல் வாழ்க்கை குறித்து வினவினார், இந்த முறை மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் காணப்பட்ட இயக்குனர், தான் காதல் உறவை அடைந்து விட்டதாகவும், தற்போது வெற்றிகரமான காதல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதையும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறினார். அப்போது மேரி இயக்குனரிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டது போன்ற ஒரு ஓவியத்தை வரைய சொன்னார்,அதாவது இயக்குனர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஓவியம் வரைந்து வீட்டின் சுவற்றில் வைக்க அறியுறுத்தினார்,அவரும் அது போலவே படைப்பாற்றலை ஓவியத்தில் வெளிப்படுத்தினார்,
விரைவில் திருமணம் செய்து கொண்டார். 
மிகவும் வசீகரமான ஆணாக இருந்தும் எண்ணங்களின் முரண்பாடுகளால் முதலில் அவரால் காதல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை, ஆனால் அவரது எண்ணங்கள் சீர் செய்யபட்டதால் அவரது காதல் வாழ்க்கை வெற்றி பெற்றதை மேரி டைமென்ட் அற்புதமாக விளக்குகிறார். 
நாம் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணங்களும் நாம் வாழும் இந்த வாழ்வில் வந்து சேரும் நாம் எண்ணங்கள் மிக முக்கியமானவை,நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)