சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? செய்வினை,ஏவல்,பில்லி சூனியங்களை முறிக்கும் ஆஞ்சநேய மந்திரம்(remove Evil spirits)


செய்வினைக்கான அறிகுறிகள்:
கெட்ட கனவுகள் அடிக்கடி  தோன்றுதல், உதாரணமாக நீங்கள் கொலை செய்யப்படுவது போன்றும், உங்களை யாரோ உயரத்திலிருந்து தள்ளிவிடுவது போன்றும்,நோய்வாய்படுவது போன்றும் கனவுகள் வந்து கொண்டே இருக்கும்.
தொழிலில் தொடர் தோல்விகள்,
எந்த நேரமும் மன சோர்வு பசியின்மை,அடிக்கடி உடல் நலம் குன்றுதல்,முகத்தில் வசீகரம் குறைந்து பொலிவற்று காணப்படுதல்,தலை முடி உதிர்தல்,தேவையற்ற பயம் எதிர்மறை சிந்தனைகள் முதலியன.

உங்கள் உணவில் செய்வினை,வசிய பொடி உங்களுக்கு தெரியாமல் கலக்க பட்டிருக்கும் என அச்சம் இருந்தால்,அதற்கு ஒரு வழி இருக்கிறது. முருங்கை சாற்றை பிழிந்து உங்கள் உள்ளங்கைகளில் சிறிது நேரம் வைத்து கொள்ளுங்கள்,அது சிறிது நேரத்தில் கெட்டி ஆகிவிட்டால் உங்களுக்கு யாரோ உணவில் வசியம் வைத்து உள்ளனர் என்று தெரிந்து விடும்.
இது தெரிந்த பின்,
சாமி முன்பு வைக்க பட்ட எலுமிச்சை சாற்றை பிழிந்து அருந்தினால் துர் வசியம் கலைக்கபடும்.
பக்கத்து வீட்டுகாரர்,தொழில் போட்டி,பொறாமை என்று இருப்பவர்கள் வீட்டில் உணவருந்துதல் தவிர்க்கபட வேண்டிய ஒன்று.
மேலும் உங்கள் பழைய ஆடை மற்றும் சில பொருட்களை தானம் செய்வது தவிர்த்தல் நல்லது இவ்வகையான பொருட்களை கொண்டும் சிலர் ஏவல்களை ஏவி விட கூடும்.
முன்னோர்கள் சிலர் செய்த செய்வினைகள்,அகலாது நின்று தலைமுறை தலைமுறையாக தொடரவும் வாய்ப்பு உள்ளது, இதற்கு ஒரே பரிகாரம் குல தெய்வ கோவில் செல்வது மட்டுமே, குல தெய்வ கோவிலில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல செய்ய வேண்டும்.

செய்வினை உங்களை ஆட்டி படைக்க அப்படி என்ன தான் காரணம்?
இறைவனையும்,இறை வழிபாடுகளையும் விட்டு விலகி வாழும் மனிதர்களின் வாழ்க்கை எதிர்மறை ஆற்றலாலும்,தீய ஏவல்களின் பிடியிலும் சிக்கி கொள்கிறது.
நீங்கள் எந்த அளவில் இறைவனை அண்டி கொள்கிறீர்களோ,அது உங்களை கெட்ட ஏவல்களிடமிருந்து காக்கும்.
இறைவனிடம் நெருக்கம் கொள்வதால் பீடைகள் விலகும், ஏவல்கள் முறியும்.

செய்வினையை வைத்தவருக்கே திருப்பி அனுப்பும் ஆஞ்சநேய மா மந்திரம்:

"ஓம் தக்ஷின் முக்ஹெ பாஞ் மூக்ஹ் ஹனுமதே கரால்
வடனே நரசிம்ஹா ஓம் ஹரம் ஹரம் ஹ்ரிம் ஹ்ரிம் ஹரோம் ஹரா சகல் பூத் ப்ரெட் தமனாயே ஸ்வாஹா"

ஏவல் பில்லி சூனியங்களை தவிடு பொடியாக்கும் இந்த ஆஞ்சநேய மந்திரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 108 முறை ஜெபிக்கவும்.
அன்று இரவு உறங்கும் முன்னர் ஒரு புள்ளியற்ற எலுமிச்சை பழத்தை ஆஞ்சநேயர் நாமம் சொல்லி தலைமாட்டில் வைத்து உறங்கவும், காலை எழுந்ததும் அந்த எலுமிச்சையை கை படாமல் வெளியே வீசி விடவும். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அதாவது 21 நாட்கள் இப்படி செய்வதால் உங்களை பிடித்த துஷ்ட ஏவல் முறிந்து வைத்தவனுக்கே போய் சேர்ந்து விடும்.
21 நாட்களுக்கு பிறகு உங்கள் வாழ்வின் பொலிவை நீங்கள் மகிழ்ச்சியுடன் காண்பீர்கள். ஜெய் ஆஞ்சநேயா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)