ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? செய்வினை,ஏவல்,பில்லி சூனியங்களை முறிக்கும் ஆஞ்சநேய மந்திரம்(remove Evil spirits)


செய்வினைக்கான அறிகுறிகள்:
கெட்ட கனவுகள் அடிக்கடி  தோன்றுதல், உதாரணமாக நீங்கள் கொலை செய்யப்படுவது போன்றும், உங்களை யாரோ உயரத்திலிருந்து தள்ளிவிடுவது போன்றும்,நோய்வாய்படுவது போன்றும் கனவுகள் வந்து கொண்டே இருக்கும்.
தொழிலில் தொடர் தோல்விகள்,
எந்த நேரமும் மன சோர்வு பசியின்மை,அடிக்கடி உடல் நலம் குன்றுதல்,முகத்தில் வசீகரம் குறைந்து பொலிவற்று காணப்படுதல்,தலை முடி உதிர்தல்,தேவையற்ற பயம் எதிர்மறை சிந்தனைகள் முதலியன.

உங்கள் உணவில் செய்வினை,வசிய பொடி உங்களுக்கு தெரியாமல் கலக்க பட்டிருக்கும் என அச்சம் இருந்தால்,அதற்கு ஒரு வழி இருக்கிறது. முருங்கை சாற்றை பிழிந்து உங்கள் உள்ளங்கைகளில் சிறிது நேரம் வைத்து கொள்ளுங்கள்,அது சிறிது நேரத்தில் கெட்டி ஆகிவிட்டால் உங்களுக்கு யாரோ உணவில் வசியம் வைத்து உள்ளனர் என்று தெரிந்து விடும்.
இது தெரிந்த பின்,
சாமி முன்பு வைக்க பட்ட எலுமிச்சை சாற்றை பிழிந்து அருந்தினால் துர் வசியம் கலைக்கபடும்.
பக்கத்து வீட்டுகாரர்,தொழில் போட்டி,பொறாமை என்று இருப்பவர்கள் வீட்டில் உணவருந்துதல் தவிர்க்கபட வேண்டிய ஒன்று.
மேலும் உங்கள் பழைய ஆடை மற்றும் சில பொருட்களை தானம் செய்வது தவிர்த்தல் நல்லது இவ்வகையான பொருட்களை கொண்டும் சிலர் ஏவல்களை ஏவி விட கூடும்.
முன்னோர்கள் சிலர் செய்த செய்வினைகள்,அகலாது நின்று தலைமுறை தலைமுறையாக தொடரவும் வாய்ப்பு உள்ளது, இதற்கு ஒரே பரிகாரம் குல தெய்வ கோவில் செல்வது மட்டுமே, குல தெய்வ கோவிலில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல செய்ய வேண்டும்.

செய்வினை உங்களை ஆட்டி படைக்க அப்படி என்ன தான் காரணம்?
இறைவனையும்,இறை வழிபாடுகளையும் விட்டு விலகி வாழும் மனிதர்களின் வாழ்க்கை எதிர்மறை ஆற்றலாலும்,தீய ஏவல்களின் பிடியிலும் சிக்கி கொள்கிறது.
நீங்கள் எந்த அளவில் இறைவனை அண்டி கொள்கிறீர்களோ,அது உங்களை கெட்ட ஏவல்களிடமிருந்து காக்கும்.
இறைவனிடம் நெருக்கம் கொள்வதால் பீடைகள் விலகும், ஏவல்கள் முறியும்.

செய்வினையை வைத்தவருக்கே திருப்பி அனுப்பும் ஆஞ்சநேய மா மந்திரம்:

"ஓம் தக்ஷின் முக்ஹெ பாஞ் மூக்ஹ் ஹனுமதே கரால்
வடனே நரசிம்ஹா ஓம் ஹரம் ஹரம் ஹ்ரிம் ஹ்ரிம் ஹரோம் ஹரா சகல் பூத் ப்ரெட் தமனாயே ஸ்வாஹா"

ஏவல் பில்லி சூனியங்களை தவிடு பொடியாக்கும் இந்த ஆஞ்சநேய மந்திரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 108 முறை ஜெபிக்கவும்.
அன்று இரவு உறங்கும் முன்னர் ஒரு புள்ளியற்ற எலுமிச்சை பழத்தை ஆஞ்சநேயர் நாமம் சொல்லி தலைமாட்டில் வைத்து உறங்கவும், காலை எழுந்ததும் அந்த எலுமிச்சையை கை படாமல் வெளியே வீசி விடவும். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அதாவது 21 நாட்கள் இப்படி செய்வதால் உங்களை பிடித்த துஷ்ட ஏவல் முறிந்து வைத்தவனுக்கே போய் சேர்ந்து விடும்.
21 நாட்களுக்கு பிறகு உங்கள் வாழ்வின் பொலிவை நீங்கள் மகிழ்ச்சியுடன் காண்பீர்கள். ஜெய் ஆஞ்சநேயா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)