சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

பிரிந்த காதல் சேர-Kadhal Vasiya Mandhiram (Love Vashikaran)


முரண்பாடான செயல்கள், தேவையற்ற விவாதங்கள், கருத்து வேறுபாடு, மாற்று சிந்தனைகள் போன்ற காரணங்களால் இன்றைய காலகட்டத்தில் காதல் கைகூடாமல் போனவர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. முரண்பாடுகளை கலைந்து பிரிந்து சென்ற காதலை மீண்டும் உங்கள் வாழ்வில் சேர்க்கவும்,முன்னாள் காதலரை மீண்டும் கவர்ந்து இழுக்கவும், ஒருதலை காதல் உடனடியாக கைகூடவும், பயன்படுத்தப்படும் ரகசியம் மற்றும் அதற்கான மந்திரம்.
ஒருவரை நீங்கள் உண்மையாகவே
நேசிக்கிறீர்கள், அவர்களையே திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்றால் அவர்களை உங்கள் வசம் கொண்டு சேர்க்கும் மகா சக்தி கொண்ட மந்திரம்,
இந்த மந்திரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மந்திரம்:
"ஓம் நமோ காமாக்ஷீ தேவியே ஆமுகி (விரும்பும் நபர் பெயர்) மே வசம் மே குரு குரு ஸ்வாஹா"

இந்த மந்திரத்தை இரவு மற்றும் பகல் என மூன்று நாட்களுக்கு 108 முறை ஜெபித்து வரவும் அடுத்த 48 மணி நேரத்தில் பலன் கிடைக்கும்.

குறிப்பு:
இந்த மந்திர உச்சரிப்பு குறித்து யாரிடமும் பகிர கூடாது. மந்திரத்தை தூய உள்ளத்துடன் உச்சரிக்கவும்.
மாற்று சிந்தனைகள் அறவே கூடாது.
மூன்று நாட்களுக்கு அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.
108 முறை ஜெபிக்கும் வேளையில் உங்கள் காதலரை தவிர வேறு எவரையும் நினைக்க கூடாது.
உங்களது எண்ணத்தின் ஊடே மந்திரங்கள் வேலை செய்வதால் மந்திரம் சொல்லி கொண்டே, உங்கள் காதலரிடம் நீங்கள் விரும்பும் ஒரு விஷயத்தை மனதிற்குள் ஒரு காட்சியாக உருவகபடுத்துங்கள், அதை குறித்த சிந்தனைகள் மட்டுமே உங்களுக்கு இப்போது தேவைப்படும்.

அதிக பலன் தேவை எனில்
மந்திர உச்சரிப்பு முடிந்த பின் கூற வேண்டிய காதலுக்கான சுய பிரகடனம்:
என் காதலருக்கு நான் எப்போதும் தேவைபடுகிறேன்,
அவர் என் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்,
எனக்கு காதலில் வெற்றி கிட்டியமைக்கு நன்றி,
நான் என் மனதிற்கு பிடித்த நபருடன் மகிழ்வுடன் வாழ்கிறேன், எனது காதல் வாழ்க்கை சீரானது, ஒவ்வொரு நாளும் என் காதல் வாழ்க்கை இனிமையாக இருப்பதற்கு நன்றி, என் காதலர் என் மீது அன்பாக இருக்கிறார்,
கனிவுடன் என்னிடம் பேசுகிறார், இந்த மகிழ்ச்சியான காதல் வாழ்க்கைக்கு நன்றி,நான் விரும்பும் நபர் எப்போதும் என்னை குறித்த சிந்தனையிலே உள்ளார். நன்றி! யூனிவெர்ஸ்! நன்றி! நன்றி!

மந்திரம் முடிந்ததும் சுய பிரகனடம் கூறுவதால் இதன் பலன் ரெட்டிப்பாக இருக்கும்.
இதனால் நீங்கள் நினைக்கும் நபர் உங்களை தேடி ஓடி வருவார். ஒன்றை மட்டும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும், சுய பிரகடனம் கூறும்போது அது ஏற்கனவே நடந்து விட்டது போல நம்ப வேண்டும், அப்போது தான் ஆழ்மனம் பிரபஞ்சத்துக்கு கட்டளையிடும் உதாரணமாக "என் காதல் வெற்றி பெறும்" என்ற வாக்கியம் எதிர்காலத்தில் விருப்பங்களை வைத்து தாமதபடுத்தி விடும், அதற்கு பதில் "என் காதல் வெற்றி பெற்று விட்டது" என்ற நிகழ் வாக்கியத்தை பயன்படுத்த வேண்டும், அப்போது தான் நாம் சரியான பாதையில் பிரபஞ்சத்துடன் பயணித்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)