ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

கருவண்டு வீட்டுக்குள் வந்தால் என்ன பலன்?



அன்பு,பாசம்,நேசம் எல்லாம் சீர்கெட்டு அனைத்தும் சீரழிந்த கலியுகத்தில் நாம் வசித்து வருகிறோம், ஜோதிடர்கள் மற்றும் மத குருமார்களின் கூற்றுப்படி தற்போது நடப்பது கலியுகமாக கருதப்படுகிறது , இங்கு கொலை, கொள்ளை,போர்கள் மிக சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது ஆகவே நான் சற்று கவனமுடன் இருத்தல் அவசியம், இறைவனை உதாசீனப்படுத்துவது மிக தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். 
கடந்த சில வருடம் முன்பு ராஜ நடைபோட்டு சிங்கத்தின் தோரணையோடு வீற்றிருந்த எங்கள் பாசமிகு தந்தை அவர்கள் தான் கடனாக குடுத்த பணத்தை திரும்பி கேட்ட போது கடன் வாங்கியவர்களால் ஏவல் பில்லி சூனியம் செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் கொல்லப்பட்டார், அவருக்கு ஏவல் வைக்கப்பட்ட நேரத்தில் வீட்டில் பல்வேறு கெட்ட சகுனங்கள் தோன்றின வீட்டு தரையில் விரிசல், நீண்ட நாளாக இருந்த கண்ணாடி திடீரென்று உடைந்து நொறுங்கியது, இரவில் நாய்கள் அழுதல், இரவு தோறும் பெண் அழும் குரல் முதலிவை மற்றும் தீரா பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தன, இறுதியாக அவர் இறப்பதற்கு முந்தைய நாள் எங்கள் வீட்டிற்குள் கருவண்டு ஒன்று புகுந்தது, என்னவென்று புரியாமல் நாங்கள் விழி பிதுங்கினோம், இறுதியாக மறு நாள் நன்றாக இருந்த எங்கள் தந்தை துடிதுடித்து எக்காரணமுமின்றி இறந்து போய் விட்டார்..

இறுதியாக வீட்டிற்கு வந்த திருநங்கை சாமியார் அவர்கள் மூலம் எங்கள் தந்தைக்கு ஏவல் வைக்கப்பட்டது உறுதியானது , கருவண்டு வீட்டுக்குள் நுழைந்தால் குடும்ப தலைவரின் உயிருக்கு ஆபத்து, கருவண்டு மரணத்தை குறிக்கும் ஏவல், கருவண்டு நுழைந்தால் வீட்டில் இறப்பு நிச்சயம் என்ற உண்மை தெரியவந்தது, 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)