ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

பேய் வீடு | பிரச்சனை தரும் கெட்ட ஆத்மாக்கள் | Haunted House


என்னோட இந்த அஞ்சு வருஷ அனுபவத்துல சொல்றேன் இந்த உலகத்தில் நல்லது இருக்கோ? இல்லையோ? ஆனா மிகப்பெரிய ஒரு கெட்ட சக்தி இருக்கு, நான் பொறந்த ஊர விட்டுட்டு முன்பின் தெரியாத ஒரு காட்டுக்குள்ள வீடு கட்டி நாங்க அனுபவிச்ச துன்பங்களுக்கு அப்பப்பா, சொல்லவே முடியாது அவ்ளோ கஷ்டம், நீங்க சொந்த ஊர்ல வீடு கட்டினீங்கன்னா நெஜமா சொல்றேன் உங்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்கும், ஆனா முன்பின் தெரியாத ஒரு இடத்திலும் வாஸ்து பார்க்காத இடத்திலேயும் வீடு கட்டினால் ரொம்பவே பெரிய அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் இருக்கு, கண்டிப்பா அது நடந்தே ஆகும். என்னோட அனுபவங்கள் உங்ககிட்ட நான் பகிர்ந்துக்க போறேன், என்னோட பேரு செல்வராஜ் நான் ஒரு பி.காம் பட்டதாரி எனக்கு இந்த பேய் பிசாசுகள் மேல எல்லாம் நம்பிக்கையே கிடையாது எங்க வாழ்க்கை ரொம்பவே அழகான போய்ட்டு இருந்துச்சு, வறுமை இருந்தாலும் வாழ்க்கை
நிம்மதியாக இருந்துச்சி, அந்த நில புரோக்கர் எங்க வாழ்க்கையில வந்த பிறகு எங்க நிம்மதி அழிஞ்சு போயிடுச்சு, நாங்களும் எல்லாரு மாதிரியும் சிறுகசிறுக சேர்த்து வைத்து தான் புது வீடு கட்டுனோம், ஆனா ஏன்னே தெரியல எங்களுக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை வரும் என்று நாங்கள் நினைச்சே பார்க்கல, நாங்க வீடு கட்டி ஒரு வருஷம் நிம்மதியா தான் இருந்துச்சு, ஆனா அதுக்கு அப்புறம் தான் வீடு கோரத்தாண்டவம் ஆட ஆரம்பிச்சது, ஒற்றுமையாக இருந்த குடும்பம் சிதறி போய்டுச்சு, யாருமே சொன்ன நம்ப மாட்டாங்க, தினம் மன உளைச்சல் நம்ம உடம்பை யாரோ முள்ளு வேலி போட்டு சுத்துன மாதிரி இருக்கும், புதுப்புது பிரச்சினைகளா வந்துட்டு இருந்துச்சு எங்க வீட்டுக்குள்ள நிம்மதி இல்ல சோர்வு களைப்பு
இதுக்கெல்லாம் என்ன காரணம்னு தேடும் போது தான் செத்துப்போன 42 பேரோட ஆத்மா எங்க வீட்ட சுத்தி எங்களுக்கு மன உளைச்சல் கொடுக்குது, பிரச்சனை கொடுக்குதுன்னு தெரிய வந்துச்சு, இந்த இறந்து போன 42 ஆத்மாக்களும் ரொம்ப கெட்ட குணம் படைத்தது, மரணத்தைக் கொடுக்கிறது, அழிவை கொடுக்கிறது, இந்த மாதிரி குணம் படைத்த கெட்ட ஆத்மாக்கள் நம்ம நிம்மதியை சீர்குலைச்சிடும், இயேசு, மாதா சாமி பேர சொல்லியும், சர்ச் மற்றும் எல்லா தெய்வங்களையும் வணங்கி பாத்துட்டோம் எந்த பிரயோஜனமும் இல்ல, கடவுளை விட நெகட்டிவ் சக்தி பெருசா? அப்படின்னு என் மனச என்னை அடிக்கடி கேட்கும், ஏன் நான் ஜெபம் செஞ்சும் என் கடவுள் இயேசுநாதர் எனக்காக ஓடி வரல? ஏன் நான் ஜெபம் பண்ணி அந்த இயேசுவோட அம்மா மரியாள் எங்க குடும்பத்தை காப்பாத்த வரல? இவங்க எல்லாம் உண்மையிலே இருக்காங்களான்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு, என்னோட கடவுளான ஏசுவே என்ன கைவிட்டது எனக்கு வருத்தமா இருந்துச்சி.

எந்த சர்ச்சில் இருந்து பாதர் வந்தாலும் சரி யாராலயுமே விரட்ட முடியாத ஒரு பிசாசுனா அது இங்க தான் இருக்கு, நாங்க பேய் வீட்டுல இருக்கோம் இந்த நிமிஷம் வரைக்கும் பேய்கள் பிரச்சினை கொடுத்துட்டு தான் இருக்கு.
உங்க வீட்ல பேய் இருக்கறதுக்கான அறிகுறிகள் என்னென்ன நான் இப்ப சொல்ல போறேன், பிரச்சினைகள் எல்லா ரூபத்துல இருந்து வரும், மன நிம்மதி கொஞ்சம் கூட உங்களுக்கு இருக்காது, நீங்க தப்பே செய்யலன்னாலும் உங்க மேல பழி வந்துவிடும், உடம்பு சரி இல்லாம போகும், யாரோ முள்வேலி போட்டு உடம்ப இறுக்குறமாரி மாதிரி இருக்கும், உங்களை யாருமே மதிக்க மாட்டாங்க, தகுதி இல்லாதவங்க எல்லாம் உங்கள தரம் தாழ்ந்து பேசுவாங்க, உங்க வீட்டுக்கு தெரிஞ்சவங்க வருகை குறைஞ்சிடும், வீட்ல அடிக்கடி கரண்ட் போகும், கெட்ட கனவு வரும், சிறுசிறு காயங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கும், நைட் ஆனா யாரோ பேசுற மாதிரி இருக்கும்,உங்க வீட்டு கூரை மேல யாரோ ஓடுற மாதிரியே இருக்கும்.


ஏன் இப்படி எல்லாம் நடக்குது?
இதற்கான காரணம் என்னன்னா உங்க வீட்ட சுத்தி இருக்கிற ஆத்மாக்கள் தாங்கள் உயிரோடு இருந்திருக்கும் போது, நீங்க தற்போது வீடு கட்டின நிலத்தை ஆக்கிரமிக்க நினைச்சிருப்பாங்க, நீங்க புதுசா இந்த இடத்துல வீடு கட்டிட்டோனே அந்த ஆத்மாவள அத பொறுத்துக்க முடியாது, அது உங்களை சபிக்கும், உங்க உடல் நலத்தை கெட்டுப் போக செய்யும், உங்களுக்கு பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கும்,

இல்ல பல வருஷத்துக்கு முன்னாடி அந்த இடத்துக்கு யாராவது சாபம் கொடுத்திருக்கலாம் இந்த இடத்துல யாராவது வீடு கட்டினால் அவர்கள் நாசமா போவாங்கன்னு சொல்லி இந்த இடத்துக்கு சாபம் கொடுத்திருப்பாங்க அதுவும் ஒரு மிகப்பெரிய காரணமா இருக்கும்.

இதனால தான் புது வீடு கட்டுனா சில பேருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் சிலருக்கு மரணம் கூட நிகழும்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)