இறந்த பின்னும் கூட தன் பிறவி குணம் மாறாமல் பிறருக்கு தீங்கு செய்ய துடிக்கும் தீய சக்திகள் அண்டம் எங்கும் நிறைந்து இருக்கின்றன, அவை ஆத்ம லோகத்துக்கு சென்றால் கர்ம வினைக்கேற்றபடி தண்டனை கிடைக்கும் என்று பயந்து பூமியிலே தங்கிகொண்டு தங்கள் பாவங்களை மேலும் மேலும் பெருக்கி கொண்டு இருக்கின்றன, அவை மனித உடலை தேடி பிடித்து தங்கள் உலக இச்சைகளை தீர்த்துக்கொள்கின்றன, அவை அடங்கா காமம், பெருந்தீனி, சிற்றின்ப ஆசைகள் முதலியன, சில ஆத்மாக்கள் சிலரது உடலில் குடி இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை அதற்கான அறிகுறிகளும் எதுவும் தென்படுவதில்லை, அவை தங்கள் இஷ்டம் போல பலவீனமான மனிதர்களை ஆட்டுவிக்கின்றன.
சென்னையை சேர்ந்த ஆனந்து ராஜ் என்ற மாணவர் மேற்கு வங்காளம் சென்ற போது சில மாதங்களுக்கு பின் கடும் உடல் மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டார்,மேலும் அவரது மூன்று வேலை உணவு பழக்கமானது எட்டு வேலையாக மாறியது, அவரது உடலில் நரம்புகள் புடைக்க ஆரம்பித்தது,அவருக்கு இரவில் தூக்கம் என்பதே இல்லாமல் போனது, மருத்துவரிடம் சென்றபோதும் கூட எந்த பிரச்னையும் இல்லை என்றே ரிப்போர்ட்டில் வந்தது, கெட்ட கனவுகள் தினம்,தினம் ஆனந்து ராஜை துளைத்தெடுத்தன, அவரது சுய இன்ப பழக்கம் அவரால் கட்டுப்படுத்த முடியாமல் சென்றுகொண்டிருந்தது, இதனால் ஒவ்வொரு நாளும் அவருக்கு நரகமாய் சென்று கொண்டிருந்தது, நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடு ஓடு என்று அவரின் மனதில் ஏதோ ஒரு மர்ம குரல் கட்டளையிட்டது, ஒரு நாள் இரவில் தான் உறங்கும் போது அருகில் ஒரு பெண் உருவம் அமர்ந்து இருப்பதை கண்டு பீதியடைந்தார், ஆனால் அவரால் பேசவே,எழுந்திருக்கவோ முடியவில்லை, மறுநாள் மதியம் ஆவிகளை தொடர்பு கொண்டு பேசும் "மீடியம் ரங்கன்" என்பவரை சந்தித்து, தன் போராட்டங்களை குறித்து கூறினார், சில வருடங்களுக்கு முன் பாலத்தில் மேலிருந்து விழுந்து இறந்து போன ஒரு வங்காள பெண்ணின் ஆவி ஆனந்து ராஜின் உடலை ஆக்கிரமித்து தன் ஆசைகளை தீர்த்து வருகின்றது, மேலும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த பெண்ணிற்கு பல்வேறு உணவுகளை ருசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்ததால், ஆனந்து ராஜின் உடலில் புகுந்து இஷ்டப்படி கட்டுக்கடங்காமல் உணவை வேட்டையாடி இருக்கிறாள், மேலும் திருமணம் ஆகியும் தாம்பத்ய வாழ்க்கை திருப்தி இல்லாமல் இருந்ததால் ஆனந்து ராஜை நாள் ஒன்றிற்கு பத்து,பதினைந்து முறை சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாக்கி சுகம் அனுபவித்து உள்ளாள், என்ற உண்மையை "மீடியம் ரங்கன்" மூலம் தெரிந்து கொண்டார்.
பங்குரா என்ற பக்கத்துக்கு கிராமத்தில் மந்திரவாதி ஒருவர் எவ்வளவு விரட்டியும் ஆனந்து ராஜின் உடலை விட்டு அந்த பெண்ணின் ஆவி போக மறுத்து விட்டது, பின்னர் நண்பர் ஒருவரால் மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்களிடத்தில் அனுப்பப்பட்டு நாற்பது நாள் தீக்ஷை எடுத்தபின்னரே ஆனந்து ராஜின் உடலை விட்டு ஆவி தெறித்து ஓடியது.
வருணாச்சிரம பேதங்களுக்கு அப்பால் யாவரும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக விளங்கும் இந்த தீக்ஷைகளை சைவசமயிகள் யாவரும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன.
தற்போது ஆனந்து ராஜ் நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார்.
its true.. i feel the same
பதிலளிநீக்கு