ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

இடு மருந்து முறிந்து வெளியேற | வயிற்றில் உள்ள மருந்து வெளியேற (idu marundhu Removal)


எதிரிகளின் சூழ்ச்சியால் இழைக்கப்படும் ஒரு கொடிய செயல்தான் இடு மருந்து எனப்படும் விஷபோஜனம்,

இந்த இடு மருந்து செய்வதற்கு மந்திரமோ தந்திரமோ தேவை படுவதில்லை, இதற்கு தேவை படுவதெல்லாம் கொடிய விஷமுள்ள நச்சு தாவரங்கள் மட்டுமே,
மனித வாழ்க்கையை முடக்கி உடலுக்கு உபாதை தரும் தாவரங்களான கள்ளி, ஊமத்தை, பார்த்தியம், தலைசுருளி, ஆடையொட்டி, ரோமவேங்கை, மத்தாமரை, காக்கை கொம்பு, ஆகிவையை இடு மருந்து செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் பல அவை தீராத வயிறு வலி, பசியின்மை,வாயு வெளியேறமால் இருப்பது, வயிற்றில் எதோ உருள்வது போன்ற உணர்வு முதலியன.

இடு மருந்தும் அதன் நச்சு தாக்கமும்:

களஞ்சிய நச்சு தோல் நோய்களை ஏற்படுத்தி உடலை பொலிவற்றதாய் மாற்றும்.

களு நச்சு உடல் நடுக்கம் மயக்கம் சோர்வு ஏற்பட செய்கிறது.

சூளை நச்சு உடல் இயக்கத்தை தடை செய்து படுத்த பாதிக்கப்பட்டவரை படுக்கையாக மாற்றி விடுகிறது.

பஞ்சவ நச்சு ஈரல் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தும்.

இதில் மிக கொடூரமானதாக மண்டுக நச்சு என்னும் இடு மருந்து காணப்படுகிறது, இதன் பாதிப்பானது மனநோய், தற்கொலை எண்ணங்கள்,பைத்தியம் பிடித்தல், முதலியவை.

தீர்வு:
தொக்கம் எடுக்கும் முறை ஒரு போதும் இதற்கு தீர்வாகாது, ஏனெனில் இடு மருந்தானது குடலில் ஒட்டி கொள்ளும் தன்மை கொண்டது, அவை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை கொல்கிறது.இன்று பலர், போலி மருத்துவரிடமும், போலி மாந்தீரிக ஆசாமிகளிடமும் சென்று பணத்தை வீண் செய்கின்றனர்,மேலும் நாள்பட்ட மற்றும் முற்றிய நிலைக்கு செல்லாமல் இதனை முன்னரே தடுப்பது அவசியம்,
வயிற்றில் இடு மருந்து இருப்பதை உறுதி செய்த பின்னர்
குப்பை மேனி என்றழைக்கப்படும் தாவரத்தின் வேரை இடித்து கசக்கி பிழிந்து சிறிது உப்புடன் பருகிவர 7 நாட்களில் இடு மருந்தானது வெளியேறி விடும்.
நல்ல கைதேர்ந்த வல்லுனரான சித்தர்களிடம் வழிமுறைகள் கேட்கலாம், ஏனெனில் விஷத்தின் தன்மையை முறியடிக்கும் சர்வ வல்லமையுள்ள தெய்வீக மூலிகையை பற்றி கொல்லிமலை சித்தர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)