இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

செய்வினை என்றால் என்ன?செய்வினையிலிருந்து நம்மை எப்படி நம்மைப் பாதுகாத்துக் கொள்வது?

படம்
செய்வினை என்பது இயற்கைக்கு மாறாக தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மாந்திரிக முறையாகும்,  ஒரு மனித சக்தியை சாத்தானிய பூஜை மற்றும் சடங்குகள் கொண்டு கட்டுப்படுத்தி சீர்குலைக்கும் இந்த செய்வினை இலங்கை,கேரளா என துவங்கி இன்று உலகின் பல்வேறு இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நபரின் பகையாளியாக விளங்கும் கிரகத்தை அவனுக்கு எதிராக களமிறக்கி அவனை சீரழிக்கும் யுக்தியாகும். செய்வினை அறிகுறிகளாக தொழில் நட்டம், நீண்ட நாள் உடல் பிணி, திடீர் பழக்க வழக்க மாற்றங்கள், நம்பிக்கை இழப்பு, தற்கொலை எண்ணங்கள், கெட்ட கனவுகள், மரண பயம், உடல் வலி,  இறப்பு முதலிவை இருக்கின்றன. சிலருக்கு பரம்பரை ஊடாக செய்வினை கோளாறுகள் ஏற்பட்டு இருக்ககூடம் அவர்கள் குலதெய்வம் கோவில் சென்று பரிகாரம் தேடுவது நன்மை தரும்.செய்வினை வைப்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்கள் நீண்டநாள் நண்பராகவோ அல்லது அலுவலகத்தில் பணிபுரியும் தொழில் போட்டி மனப்பான்மை கொண்டவராகவோ கூட இருக்கலாம், இன்று சொந்த குடும்பத்தில் உள்ளவர்களே தங்கள் குடும்பத்தார்க்கு செய்வினை வைப்பது சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது,  ஆகவே விழிப்புடன் இருப்பது நல...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)