ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

நினைத்தவை உடனே நிகழும்- அதிவிரைவு ஈர்ப்பு விதி டிப்ஸ் (Manifestation tips)


அதிவிரைவு ஈர்ப்பு விதி டிப்ஸ்:
உங்கள் ஆழ்மன அதிர்வுகள் ஆதிக்கம் செலுத்த துவக்கி விட்டால் நீங்கள் நினைப்பவை உடனே நிகழும்.

ஈர்ப்பு விதிக்கு பயன்படுத்த கூடிய
சரியான கருவிகளைப் பயன்படுத்தவும்.(நன்றி கல், குவார்ட்ஸ், ரோஜா இதழ்கள், மெழுகுவர்த்திகள் முதலியன)

நீங்கள் உண்மையில் உங்களுக்கு என்ன விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறித்து நன்றி மிக்க ஒன்றாய் மாற்றுங்கள்.

சிரமங்கள் இருந்தாலும் தொடர்ந்து நேர்மறை சிந்தனையில் செல்லும் திறன்.

நிகழ் வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.

நன்றியுணர்வு மற்றும் பெருந்தன்மையை பயிற்சி செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் என்ன வரப்போகிறது என்பதற்கான நன்றியுணர்வை உணர வேண்டும்.

எப்போதும் நேர்மறையாக இருங்கள்.

உங்கள் கனவுகளை நனவாக்கும் திறன் உங்களிடம் உள்ளது என்ற நம்பிக்கை வளர்த்தல்.

பெறுதலுக்கு ஆயத்தமாகுங்கள்.

உணவு முறை மற்றும் உடலை பேணுதல் மூலம் நல்ல ஆற்றலை கவர்ந்திழுத்தல்:
இதில் மிக முக்கியமான ஒன்று நம்மில் பலர் கவனிக்க தவறுகிறோம், அது நாம் உண்ணும் உணவு மற்றும் நமது உடல், நம் உடலே கோவில் என்று திருமூலர் கூறுகிறார், அப்படிப்பட்ட உடலை சீராகவும் சிறப்பானதாகவும் வைத்திருப்பது நம் கடமை
அல்லவா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாமிச உணவு,கெமிக்கல் பானங்கள், வெள்ளை சக்கரை முதலியவற்றை தவிர்த்து பச்சை காய்கறிகள்,கிழங்குகள்,கீரை வகைகள் முதலியவற்றை உணவில் சேர்த்து கொள்ளுதல் நன்மை பயக்கும்.
நல்ல உணவுகள் நேர்மறை ஆற்றலை உடலுக்கு அளிக்கின்றன, இதனால் உளம் ஆரோக்கியம் பெற்று தியானம் செய்வதால் பலன் கிட்டுகிறது மேலும் ப்ரபஞ்சத்திடம் நமக்கு நல்ல இணக்கம் ஏற்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)