சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

எலுமிச்சை-பாசிட்டிவ் எனர்ஜி (Bring Positive Energy with Lemon)

எதிர்மறை ஆற்றல் உங்கள்,
பண வரவு ,உறவுகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் அதிகமான எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் சுற்றுச்சூழலை தேக்கமடையச் செய்யும்.
அப்படி பட்ட கெட்ட ஆற்றலை வீட்டில் இருந்து வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
சக்தி மிக்க எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு , இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கிட்னி கற்களை உடைத்து வெளியேற்றுதல் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பது, என எண்ணற்ற வகையில் உதவுகிறது. எலுமிச்சை ஒரு சுத்திகரிப்பு முகவர். அவை சுத்தம் செய்ய சிறந்தவை. மேலும் சில பழங்கால நடைமுறைகளில், எலுமிச்சை ஒரு இடத்திலிருந்து எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும்.

பச்சை எலுமிச்சை உதவியுடன் நேர்மறை ஆற்றலை அதிகரித்தல்:
இது மிகவும் எளிதானது, இப்பொழுது, உங்களுக்கு சில பச்சை எலுமிச்சைகள் தேவை.
உங்கள் வீட்டின் திறந்த மற்றும் காற்றோட்டமான இடங்களில் மூன்று பச்சை எலுமிச்சைகளை வையுங்கள், அவை சில நாட்கள் கழிந்த பின் மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக மாறும் தருணத்தில் அவற்றை, கை படாமல் பக்குவமாக எடுத்து வெளியேற்றி விடுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்வது வீட்டிற்கு மிகவும் நல்ல ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும், மேலும் உங்களுக்கு அமைதி,பண வரவு, முதலிவை கிடைக்க பச்சை எலுமிச்சை உதவி புரிகிறது.

வீட்டில் அதிக எதிர்மறை தேங்கும் இடமான படுக்கை அறையை நாம் எலுமிச்சை கொண்டு சுத்திகரிக்கலாம். உறங்குவதற்கு முன்னர் இரண்டு பச்சை எலுமிச்சைகளை கட்டிலின் கீழே வைக்கவும் அது ஒரு சில தினங்களில் நெகடிவ் ஆற்றலை உள்வாங்கி கொண்டு கருப்பாகி விடும் அப்போது அதனை கை படாமல் பாலிதீன் பை கொண்டு வெளியே எறிந்து விடவும்.

தொலைதூர பயணம் மற்றும் நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்வோர், ஓரிரு எலுமிச்சைகளை கைப்பையில் போட்டு கொண்டு செல்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன,
எலுமிச்சை ஆற்றல் சுத்திகரிப்பானாக செயல்பட்டு நாம் எதிர் கொள்ளும் கெட்ட ஆற்றலிடமிருந்து நம்மை காக்கும் வல்லமை பெற்றது.

எலுமிச்சை இலைகளைப் பயன்படுத்துதல்: இயற்கையின் கொடையான, எலுமிச்சையின் இலைகளை நீரில் ஊறவைத்து ஏழு நாட்களுக்கு உறங்க செல்வதற்கு முன் குடிக்கலாம்,இதனால் உடலுக்கு (பிராணா) பாசிட்டிவ் எனர்ஜியும், குணப்படுத்தும் ஆற்றலும் உண்டாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)