சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

இரகசியம் தமிழில்-பாப் பிராக்டர் (Bob Proctor Quotes in Tamil)


திரை விலக்கப்படும் ரகசியம்:
ரகசியமானயது நீங்கள் விரும்பும் எந்த ஒன்றையும் உங்களுக்கு கொடுக்கும் அது மகிழ்ச்சி, ஆரோக்கியம்,செல்வச்செழிப்பு என்று எதுவென்றாலும்.

உங்களது ஆழ் மனதால் ஒன்றை பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்கள் நிஜ வாழ்வில் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் மனதால் சிந்தனை செய்து அதை உங்கள் ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியுமெனில் அதை நீங்கள் வாழ்வில் அடைய போவது உறுதி என்கிறார் தத்துவ நூலாசிரியர் மற்றும் தனிநபர் பயிற்சியாளரான பாப் பிராக்டர்.

கற்பனை எனும் பேராற்றல்:
ஐந்து நிமிட தியானத்துக்கு பின் உங்கள் கண்களை மூடி உங்கள் உடலை தளர்த்தி உங்கள் வாழ்க்கை எல்லா விதத்திலும் ஆசீர்வதிக்க பட்டிருப்பதாக கற்பனை காட்சி செய்து கொள்ளுங்கள். செழிப்புடன் வாழ்வதாக நீங்கள் சிந்திக்க துவங்கும் போது ஈர்ப்பு விதி மூலமாக உங்கள் வாழ்க்கையை பேராற்றலுடன் நீங்கள் தீர்மானித்து கொள்கிறீர்கள்.
உலகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் ஈர்ப்பு விதி தான் படைப்பு விதி. குவாண்டம் அறிஞர்களின் கூற்றுப்படி மொத்த பிரபஞ்சமும் நமது ஆழ் மனதுடன் தொடர்புடையது என்பதாகும். இந்த மாபெரும் ஈர்ப்பு விதியை நீங்கள் முற்றிலும் உணரும் போது நீங்கள் உங்கள் ஆழ்மன சிந்தனையை கொண்டே உங்கள் வாழ்க்கையை உருவாக்கி கொள்வதில் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.

அற்புதமான வாழ்க்கை என்பது சாத்தியமான ஒன்று தான் அது நீங்கள் இரகசியத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்து அமைகிறது.

பாப் பிராக்டர் பொன்மொழிகள்:

"எண்ணங்கள் பொருட்களாகின்றன,நீங்கள் அதை உங்கள் மனதில் காண்கிறீர்கள் என்றால்,அதை உங்கள் கையில் பிடிப்பீர்கள்"

"மாற்றம் தவிர்க்க முடியாதது
ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி என்பது ஒரு தேர்வு"

"உங்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நீங்கள் மட்டுமே மேலும் அதற்கான ஒரே தீர்வும் நீங்கள் தான்"

"வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்கவில்லை. உங்கள் நோக்கம் தான் உங்கள் வாழ்வுக்கான காரணம்"

"
வெற்றியாளர்கள் பரந்த விழிப்புடன் இருக்கிறார்கள்; அவர்கள் துடிப்புடன் செயல்படுகிறார்கள். . உண்மையான வெற்றியாளர்கள் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல,அவர்கள் கனவுகளை நிஜமாக்குபவர்கள், அவர்கள் தங்கள் கனவுகளை உணர்கிறார்கள். வாழ்க்கை வழங்கும் பல வாய்ப்புகளை மற்றவர்களை எழுப்ப எப்போதும் முயற்சி செய்கிறார்கள்"



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)