ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

நன்றியுணர்வு கல் (Gratitude Stone)


ஒரு நன்றியுணர்வு கல் என்பது உங்கள் சட்டைப் பையில் அல்லது உங்கள் மேசையில் பொருந்தக்கூடிய ஒரு சிறிய கல், நீங்கள் நன்றியுடன் இருக்க நன்றியுணர்வு கல் நினைவூட்டுகிறது!
இந்த நன்றியுணர்வு கல்லானது உங்கள் வாழ்வை நன்றியுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

நன்றியுணர்வு கல்லை எங்கிருந்து கண்டெடுக்கலாம்?
ஆற்றங்கரை அல்லது கடற்கரை ஓரங்களில் காணப்படும் கூழாங்கற்களில் நல்ல வழ வழப்பான ஒரு கல்லை தேர்வு செய்து உங்கள் சட்டை பையில் அல்லது உங்கள் கைகளில் வைத்து கொள்ளுங்கள். இரவு தூங்கும் முன்னர் அந்த கல்லை கைகளில் அடக்கி வைத்து கொண்டு அன்று நடந்த நல்ல சம்பவங்களுக்கு நன்றி கூறுங்கள். இது உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களை ஈர்க்கும் ஒரு நல்ல வழிமுறை. நீங்கள் அந்த கல்லை காணும் போதெல்லாம் கைகளில் அடக்கி நன்றி கூறி, நன்றியால் உங்கள் மனதை நிரப்புங்கள். நீங்கள் எந்த அளவு நன்றியை உணர்கிறீர்களோ, அந்த அளவு பிரபஞ்சம் உங்கள் வாழ்வில் மாயாஜாலத்தை கொண்டு வந்து விடும். நீங்கள் அலுவலகம் அல்லது வேறு எங்கு சென்றாலும் இந்த சிறிய கல்லை எடுத்து செல்லுங்கள் நன்றி மிக்க ஒரு நாளாய் மாற்றுங்கள்.

அதிக பலன் தேவை எனில் உங்கள் பிறப்பை உள்ளடிக்கிய கற்களை (Birth Stones) நன்றியுணர்வு கற்களாக பயன்படுத்தலாம்.

ஏன் ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரம் கிடைக்கும் கற்களை தேர்ந்தெடுக்க வேண்டும்?
கடற்கரை மற்றும் ஆற்று படிகைகளில் அதிக ஆக்ஸிஜன் நிரம்பி காணப்படுவதால் நல்ல ஒரு ஆரோக்கியமான அதிர்வலைகளை அங்கு காணப்படும் கற்கள் வெளிபடுத்துகின்றன. ஆகவே இங்கிருந்து தேர்வு செய்யும் கல் அதிக பலன் தரும் ஒன்றாக விளங்குகிறது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)